உடல் முழுக்க வெட்டு மர்ம முறையில் வாலிபர் கொலை..!! கொலையின் பின்னணி..? பரபரப்பான தருமபுரி ..!!
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே வாலிபர் மர்மமான முறையில் குத்தி கொலை. காவல் துறையினர் மனைவி மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தண்டுகாரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மார்கண்டன். இவரது மகன் சிவபிரகாசம் (47). இவருக்கு திருமணமாகி பொன்னுருவி என்ற மனைவியும், நந்தகுமார் என்ற மகனும், ரம்யா, நித்யா, சந்தியா ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.
சிவபிரகாசம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தண்டுகாரன்பட்டியில் உள்ள சிவபிரகாசத்தின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார். இதையொட்டி உறவினர் வீட்டின் அருகே நேற்று இரவு தெருக்கூத்து நடைபெற்றுள்ளது.
அதனை பார்ப்பதற்காக சிவபிரகாசம் வீட்டில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு சென்றார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவரவில்லை. இந்த நிலையில் சிவபிரகாசத்தின் வீட்டின் அருகே உள்ள சென்றாய பெருமாள் கோவில் பின்புறம் உள்ள புதரின் அருகே சிவபிரகாசம் ஒரு கை மட்டும் கட்டப்பட்டு பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து சிவபிரகாசத்தின் மனைவி மற்றும் உறவினர்களிடம் தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து இச்சம்பவம் குறித்து தொப்பூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டனர். சம்பவ குறித்து தகவலறிந்தது சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வரன் மற்றும் தொப்பூர் காவல் துறையினர் வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது சிவபிரகாசத்தை மர்ம நபர்கள் யாரோ சிலர் கத்தியால் குத்தி கொலை செய்து பின்னர் ஒரு கையை கயிற்றால் கட்டி சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு இழுத்து சென்று புதரில் வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து காவல் துறையினர் சிவபிரகாசத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சிவப்பிரகாசத்தின் வீட்டின் அருகே நடந்திருப்பதால் சந்தேகத்தின் பெயரில் மனைவி மற்றும் உறவினர்கள் ஒரு சிலரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தொப்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிவபிரகாசத்தை முன்விரோதம் காரணமாக யாராவது அடித்து கொலை செய்தனரா? அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் யாராவது அடித்து கொலை செய்தனரா? என்ற பல்வேறு கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.