கர்நாடக நீர் திறப்பு குறித்து அதிரடி தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம்..!!
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீரை திறக்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவை கர்நாடகா பின்பற்ற வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் ஒழுங்காற்று குழு மற்றும் நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவை பிறப்பித்துள்ள உத்தரவை கர்நாடகா அரசு செயல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
மேலும், தமிழகத்திற்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இந்நிலையில் காவிரி பிரச்சினையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம் கொடுத்துள்ளார்..
செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், காவிரி நீர் திறப்பால் குறுவை சாகுபடிகள் காப்பாற்ற படும். எவ்வளவு தண்ணீர் இருந்தாலும் அதில் ஓரளவுக்கு பங்கிட்டு தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிக்கைவிடுத்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மகிழ்ச்சி கொடுக்கிறது. ஒட்டு மொத்த நீரையும் திறக்க கோரி.., தமிழ்நாட்டுக்கு குறைந்த அளவு தண்ணீரைத்தான் கொடுப்போம் என காவிரி தெரிவித்துள்ளது.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை மட்டுமே திறந்து வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விட வேண்டும்.., என உச்ச நீதிமன்றம் கர்நாடகவிற்க்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்
உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பு, காவிரி ஆணைய உத்தரவின்படி கர்நாடகா நீரை திறந்துவிட வேண்டியது கட்டாயம். தீர்ப்பை அமல்படுத்த முடியாமல் போனால் அது நீதிமன்றதிற்கு அவமதிப்பு கொடுப்பதற்கு சமமாகி விடும். சட்ட ரீதியாக செயல் பட்டு கொண்டிருக்கும் பொழுது பேச்சுவார்தை செய்வது சரியாக இருக்காது என அவர் பேசினார்.