கடந்த சில வருடங்களாக இளம் வயதினர் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்து வருவது அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் உள்ள தர்மாவரம் நகரில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது இரண்டு இளைஞர்கள் தொடர்ந்து நடனமாடி விழாவைக் கொண்டாடி உள்ளனர். அதில் பிரசாத் (26) என்ற இளைஞர் நெஞ்சு வலிக் காரணமாக சுருண்டு விழுந்துள்ளார்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தோர் பிரசாத்தை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பிரசாத்தின் மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
గణేష్ మండపం దగ్గర డాన్స్ చేస్తూ గుండెపోటుతో మృతి
శ్రీ సత్యసాయి జిల్లా – ధర్మవరంలో
ప్రసాద్ (26) అనే యువకుడు బుధవారం రాత్రి గణేష్ మండపం వద్ద డాన్స్ చేస్తూ గుండెపోటుతో ఒక్కసారిగా కుప్పకూలి మృతి చెందాడు. pic.twitter.com/RUqf1mzRMR— Telugu Scribe (@TeluguScribe) September 21, 2023
நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிந்துள்ள சம்பவம் ஆந்திர மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுத் தொடர்பான வீடியோ இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
– யமுனா