ஜெயலலிதா மரணம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி முடிவு..!!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் “ஜெயலலிதா” மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது அதில் “ஆறுமுகசாமி” ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் விசாரணை நடத்துவது குறித்த கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் காலமானார். உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து.. தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.
செல்வி ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் குழு அமைத்து கடந்த 2017ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை அனுப்பியது.
ஐந்து ஆண்டுகளுக்கு பின், ஆறுமுகசாமி ஆணையம் ஆகஸ்ட் 23ம் தேதி அரசிடம் விசாரணை குறித்த அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிடக் கோரி “பத்திரிகையாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி” சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில் அவர் சொல்லியிருப்பது, நீதிபதி ஆறுமுகச்சாமி அறிக்கையின் படி ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது, அவருக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை மற்றும் மரணம் குறித்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில், நியாயமான விசாரணை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என கூறினார்.
அந்த மனுவில் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, வழகரிஞர் “ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம்” ஆஜராகினார்.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை எனவும் அவர் கூறினார். இதை பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரரின் மனுவை உண்மையின் அடிப்படையில் முடிவு செய்யுமாறு சிபிஐக்கு வழக்கை மாற்ற உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்துவைத்தனர்.