மீனவ தந்தைக்கு காரை பரிசாக அளித்த மகன்- ஊரும் உறவும் 22
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு மீன் மார்க்கெட் ஒன்றிற்கு ஒரு வெள்ளைக்கலர் லக்ஸரி கார் வந்து நின்றது. மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்கு வந்து இருப்பார்கள் என அனைவரும் நினைத்துக்கொண்டிருந்த போது, ஒருவர் இறங்கி மீன்களை மார்க்கெட்டில் எடுத்துவந்து வைக்க தொடங்கி விட்டார்.
அனைவரும் ஆச்சரியத்தில் வியந்தனர்.., அவரிடம் மீன் வாங்க சென்று பேச்சு கொடுக்க ஆரமித்தோம், என் பெயர் சிவானந்தம், என் மனைவி பெயர் காளியம்மாள், அச்சுந்தன்வயல் எங்கள் வாழ்விடம்.
எங்களின் பரம்பரையே மீன்பிடி தான், மீன் பிடித்து அதில் வரும் வருமானத்தை வைத்து, என் மகன் மற்றும் மகளை படிக்க வைத்தேன், மகன் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு. வளைகுடா நாட்டில் ஒரு கப்பல் நிறுவனத்தில் வேலைக்கு சென்றான்.
என் மகன் அங்கு வேலைபார்த்து, அவன் தங்கையை ஒரு பெரிய இடத்தில் கட்டி கொடுத்தான். கல்யாணம் முடிந்ததும் எங்களுக்கும் ஒரு வீட்டை கட்டி கொடுத்தான். வீட்டை கட்டி கொடுத்துவிட்டு இனி நான் உங்களை பார்த்துக்கொள்கிறேன்.
எங்களுக்காக நீங்கள் உழைத்து போதும், இனியாவது நீங்கள் ஓய்வு எடுங்கள் என்று சொன்னார், ஆனால் உழைத்த உடம்பிற்கு ஒய்வு சில நாட்களுக்கு மேல் தங்கவில்லை, இதை என் மகனிடம் சொன்னேன் சரி, நான் ஒரு காரை வாங்கி பரிசாக அனுப்புகிறேன். அந்த காரில் சென்று மீன் விற்பனை செய்ய தொடங்குங்கள் என்று சொன்னார்.
சில நாட்கள் போனதும்.., நான் உங்களுக்கு மீன் வளர்ப்பு பண்ணை வைத்து தருகிறேன் வெயிலில் அலைந்து கஷ்டப்படாமல் வீட்டில் இருந்தே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார்.
மகனின் விருப்பப் படியே காரில் வந்து மீன் விற்பனை செய்கிறோம்.. என்று சொன்னார். பெற்றோரின் கஷ்டத்தை புரிந்துக்கொள்ளும் சுரேஷ் கிருஷ்ணன் அவரை பாராட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டோம்.
மேலும் இதுபோன்ற பல உண்மை கதைகளை பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..