“மறு சீரமைப்பு சதியை முறியடிக்க வேண்டும்..” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..!!
“நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் எந்தவகையிலும் பாதிக்கப்படக் கூடாது” என்பதை வலியுறுத்திமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிற தமிழ்நாட்டின் நலன் கருதி, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஒன்றிய அரசை வலியுறுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், இன்றைக்கு நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்போது, தொடக்க உரை நிகழ்த்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அனைத்துவளர்ச்சிக் குறியீடுகளிலும், முதன்மை மாநிலமாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்ற சூழ்நிலையில், தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, அவ்வாறு குறைக்கப்படும் நிலையில், தமிழ்நாடு மிகக் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
ஒன்றிய அரசு 2026-ஆம் ஆண்டில், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்ய உள்ளதாகவும், பொதுவாக தொகுதி மறுசீரமைப்புஎன்பதுமக்கள் தொகை கணக்கீட்டினை அடிப்படையாகக் கொண்டுதான் செய்யப்படுகிறது என்றும் தெரிவித்த முதலமைச்சர் அவர்கள், பல பத்தாண்டுகளாக வெற்றிகரமான குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள், பெண்கள் கல்வி மற்றும் சுகாதார முன்முயற்சிகள் மூலமாக நம் மாநிலத்தின் மக்கள் தொகை குறைவாகஇருக்கின்ற காரணத்தினால், தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதுள்ள மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் நமது பிரதிநிதித்துவம் குறையும் என்றும் குறிப்பிட்டார்.
இப்போது நாடு முழுவதும் இருக்கின்ற மக்கள் தொகையின் அடிப்படையில்நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை (534) உயர்த்தாமல், தொகுதிகளைப்பிரித்தால், தமிழ்நாடு 8மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டிய சூழ்நிலைஏற்படும்என்றும், அதாவது, இனி தமிழ்நாட்டுக்கு 39 எம்.பி.க்கள் இருக்கமாட்டார்கள் 31 எம்.பி.க்கள் மட்டுமே இருப்பார்கள்என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இன்னொரு முறையில் நாட்டில் ஒட்டுமொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கையைஉயர்த்தி, தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில்அதற்கேற்ப பிரித்தாலும், தமிழ்நாட்டிற்குஇழப்புதான் ஏற்படும்என்றும், தமிழ்நாட்டிற்கான பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் குறைக்கப்பட்டால், அங்கு தமிழ்நாட்டினுடைய குரல் எதிரொலிக்காமல் போய்விடும் என்றும் தெரிவித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இது வெறும் உறுப்பினர்களின்எண்ணிக்கையைப் பற்றிய கவலை மட்டுமல்ல; தமிழ்நாட்டின் உரிமையைச் சார்ந்தது எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.
தமிழ்நாடு மட்டுமல்ல, தென்னிந்திய மாநிலங்கள் அனைத்துமே எதிர்கொள்ளவிருக்கும் இந்த முக்கியமான பிரச்சினையில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அனைத்து அரசியல் கட்சிகளையும், தலைவர்களையும் ஒன்றிணைக்க முதற்கட்டமாக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும், கட்சி அரசியலை எல்லாம் மறந்து, அரசியலைக் கடந்து இந்த விவாதத்தில் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்கேட்டுக் கொண்டார்கள்.
பின்னர், கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை முன்மொழிந்தார். அடுத்து, அரசுத் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., அவர்கள் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் அதன் பாதிப்புகள் தொடர்பாக எடுத்துரைத்தார். பின்னர், பல்வேறு கட்சிகளைச் சார்ந்த பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் எவ்வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதை நிலைநிறுத்தும் வகையில் தங்களின் கருத்துகளை எடுத்துரைத்ததோடு, இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தங்கள் ஆதரவைத் தெரிவிப்பதாகவும் உறுதிபடத் தெரிவித்தனர்.
கூட்டத்தின் இறுதியில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..