Sunday, September 24, 2023
Madhimugam
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
    • வைகோ
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
    • இன்று ஒரு தகவல்
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
    • வைகோ
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
    • இன்று ஒரு தகவல்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

மணிப்பூர் கலவர பூமியாக மாற காரணம்..?

பழங்குடியினர் கஞ்சா பயிரிடுகின்றனர் என்று கூறி பல இடங்களில் அவர்களின் பயிர்களை அழித்து விரட்டியத்தனர். பழங்குடியினரில் பெரும்பான்மையினர் கிறித்துவர் என்ப தால் பா.ஜ.க  ஆட்சி இத்தகைய ஒடுக்குமுறைகளில் ஈடுபட்டது.  இது பழங்குடியினர்  இடையே  கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

July 22, 2023

RelatedPosts

கண்டனம் தெரிவித்துள்ள கன்னடா அரசு..!!  இனி இந்துக்களுக்கு எதிராக வீடியோ வெளியிட்டால்  இது தான் நடக்கும்..!!  

தமிழர்களுக்கு  ஆர்மீனியா நாட்டில் நடந்த கொடுரம்..!!  கண்ணீர்   வடிக்கும்  தமிழர்கள்..!!

கனடா நாட்டுடனான உறவில் விரிசல்..!! இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை என்ன..?

0
(0)

மணிப்பூர் கலவர பூமியாக மாற காரணம்..?

மலைவாழ் பழங்குடியினரின் உரிமையைப் பாது காப்பதற்காக 3.5.2023 அன்று மணிப்பூர் அனைத்துப் பழங்குடி இட மாணவர் கூட்டமைப்பு (All Tribal Students’ Union Manipur) (ATSUM) சார்பில் மலைவாழ் பழங்குடி யினரின் ஒற்றுமைப் பேரணியை எட்டு மலை மாவட்டங்களில் நடத்தினர். பா.ஜ.க  ஆட்சியின் ஆதரவோடு மெய்த்தேயி குழுவினர் பழங்குடி மக்கள் மீது மிகப்பெரியத் தாக்குலை நடத்தினர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையில் மிகப்பெரிய வன்முறை மூண்டது.

3.5.2023 அன்று தொடங்கிய வன்முறைப் போராட்டம் இன்று வரை தொடருகிறது. ஏராளமான வீடுகள், தேவால யங்கள், மருத்துவமனைகள் தீக்கிரையாக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் பழங்குடியினரே ஆவர்.

இலட்சக்கணக் கானவர்கள் தங்கள் உடைமைகளை இழந்து பரிதவித்தனர். வீடிழந்தவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அகதிகள் முகாம்களில் தங்கினர். இராணுவமும், அசாம் ஆயுதப்படையும் வரவழைக்கப்பட்டது. மெய்த்தேயி இன மக்கள் வாழும் சமவெளிப் பகுதியில் பெரும்பான்மையினர் இந்துக்கள், சிறுபான்மையினர் கிறித்தவர்கள். சங்பரிவாரக் கும்பல்கள் அந்த பகுதியில் மட்டும் 247 தேவாலயங்களை அழித்தனர்.

உயர்நீதி மன்றத்தின்  தீர்ப்பை எதிர்த்து தின்காங்க்லுங்க் காங்க்மேய் இரண்டு மேல்முறையீடுகளை உச்சநீதி மன்றத்தில் செய்தார். ஒன்று மெய்த்தேயி மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரைக்குத் தடை. இரண்டாவது நீதிமன்ற அவமதிப்புக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முன் விசாரணைக்கு வந்தது. மேல் முறையீடு செய்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரும் மலைவாழ் பகுதி குழுவின் தலைவருமான தின்காங்க் லுங்க் காங்க்மேய் பா.ச.க. வின் மேலிடம் அழுத்தம் காரணமாகத் திரும்பப் பெற்றார்.

அந்த மேல் முறையீட்டு வழக்குகளை அனைத்து இந்திய பழங்குடி மாணவர் சங்கத்தின் தலைவர் பட்டின்தாங் லூபெங் (Paotin thang Lupheng) தொடர்ந்து நடத்தினர்.

7.5.2023 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “எந்த மாநிலத் திற்கும் எவர் எவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான அதிகாரம் நீதித்துறைக்கு இல்லை என்று உச்சநீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளதை எடுத்துக்காட்டி மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது” என்று தீர்ப்பளித்தார்.

Manipur High Court - NORTHEAST NOW

 

மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் அந்தத் தவறான தீர்ப்புதான்   மே மாதம் 3-ஆம் நாள் நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட வன்முறைக்கு மூலக்காரணமாகும். மணிப்பூர் சட்டப்படி பழங்குடியினர் வாழும் மலைப் பகுதியில் பள்ளத்தாக்கில் வாழும் மெய்த்தேயி இனமக்கள் நிலம் வாங்கமுடியாது. அதனால்தான் நிலம் வாங்கும் உரிமையைப் பெற்று மலைப் பகுதியின் நிலவளங்களைச் சுரண்டுவதற் காகவே இந்துக்களான இவர்கள் பட்டியல் இனப் பிரிவில் சேர்க்க வேண்டும் என்கின்றனர்.

பா.ஜ.க பற்ற வைத்த தீயில் எண்ணெய் ஊற்றி எரிய வைத்தது மணிப்பூர் உயர்நீதிமன்றம்.  மணிப்பூர் பா.ஜ.க  அரசின் முதலமைச்சர் பைரோன் சிங் கடந்த ஓராண்டாகவே மணிப்பூர் மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களைப் பறிக்கும் வகையில் காடுகளின் பாதுகாப்புச் சட்டத்தை திருத்தி, மலைவாழ் மக்களின் வாழ்விடங்களில் பல வீடுகளை ஆக்கிரமிப்பு என்று கூறி இடித்துத் தள்ளினார்.

பழங்குடியினர் கஞ்சா பயிரிடுகின்றனர் என்று கூறி பல இடங்களில் அவர்களின் பயிர்களை அழித்து விரட்டியத்தனர். பழங்குடியினரில் பெரும்பான்மையினர் கிறித்துவர் என்ப தால் பா.ஜ.க  ஆட்சி இத்தகைய ஒடுக்குமுறைகளில் ஈடுபட்டது.  இது பழங்குடியினர்  இடையே  கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பன்னாட்டு கம்பெனிகளுக்கு மலை வளங்களை தாரைவார்ப்பதற்காக மணிப்பூர் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.  அதற்குத் தடையாகவும் தங்களின் நீண்டகால வாழ்விடத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் மலைவாழ் மக்கள்  நீண்டகாலமாக  ஆயுதம்  ஏந்தி  போராடியும்  வருகின்றனர்.

 

மலைவாழ் பகுதியைச் சேர்ந்த பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் 10.5.2023 அன்று கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் ஏழு பேர் பா.ஜ.க   சட்ட மன்ற உறுப்பினர்கள்

அந்தக் கூட்டறிக்கையில் இனிமேல் மணிப்பூர் மாநிலத்தின் நிர்வாகத்தின் கீழ்  நாங்கள் வாழ விரும்ப வில்லை. எங்களை ஒடுக்குவதிலேயே இந்த அரசு குறியாக இருக்கிறது. எனவே எங்களுக்கு தனி நிர்வாக அமைப்பு (யூனியன் பிரதேசம்) தேவை என்று வலியுறுத்தினர்.  உள்துறை அமைச்சர் அமித்ஷா அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

மலைப்பகுதியில் வாழும் குக்கி, நாகா இனமக்கள் குறிப்பாக கிறித்தவர்கள், மே 3 அன்று நடைபெற்ற தாக்கு தலில் குக்கி இன மக்கள் அதிகமாக வாழும் கராசந்தபூர் பகுதிதான் மிக மோசமான அளவில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. அங்குள்ள தேவாலயங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.  மாநில அரசின் துணையுடன் சங் பரிவாரக் கும்பல்கள்தான் இந்தத் தாக்குதலை மேற்கொண்டது. வழக்கம் போல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இந்த வன்முறைகளுக்குக் காரணம் கிறித்துவ  மிஷனரிகள்தான்  என்று ஒப்பாரி வைக்கின்றனர்.

காங்கிரசு கட்சித் தலைவர் கார்க்கே உள்ளிட்டோர் 30.5.2023 அன்று குடியரசுத் தலைவரைச் சந்தித்து மணிப்பூர் கலவரத்தை   நீங்கள் தலையிட்டு உடனடியாக  தீர்த்து  வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா வன்முறை நிகழ்ந்த பிறகு பல நாள்கள் கழித்து 29.5.2023 முதல் 1.6.2023 வரை மணிப்பூரில் தங்கியிருந்து பல்வேறு போராளிக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை என்னும் நாடகத்தை நடத்தி முடித்தார்.

தலைமை அமைச்சர் நரேந்திர மோடி இதைப் பற்றி வாயே திறக்கவில்லை.  கலவரத்தை நடத்தி இந்துத்துவா வெறியூட்டி பா.ஜ.க ஆட்சியைத் தக்க வைத்து கொள்வதற்காகவே இப்படியெல்லாம் செய்கிறார்கள். யார் செத்தால் அவர்களுக்கு என்ன, அவர்களுக்கு வேண்டியது ஆட்சி.

Loading

How useful was this post?

Click on a star to rate it!

ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Tags: #manipur#Manipur Viloenceபாஜகபிரதமர் நரேந்திர மோடிமணிப்பூர் கலவரம்மணிப்பூர் முதல்வர் பைரோன் சிங்மணிப்பூர் வன்முறைமத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷா
ADVERTISEMENT
Previous Post

மணிப்பூர் தோன்றிய வரலாறு..

Next Post

மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம்..! கண்ணீர் வடித்த ராணுவ வீரர்..!

Related Posts

உலகம்

கண்டனம் தெரிவித்துள்ள கன்னடா அரசு..!!  இனி இந்துக்களுக்கு எதிராக வீடியோ வெளியிட்டால்  இது தான் நடக்கும்..!!  

உலகம்

தமிழர்களுக்கு  ஆர்மீனியா நாட்டில் நடந்த கொடுரம்..!!  கண்ணீர்   வடிக்கும்  தமிழர்கள்..!!

உலகம்

கனடா நாட்டுடனான உறவில் விரிசல்..!! இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை என்ன..?

உலகம்

இந்தியாவிற்கு போக வேண்டாம்… பகீரங்க அறிவிப்பை வெளியிட்ட கனடா… பிண்ணனியில் இருக்கும் அதிர்ச்சி தகவல்..!

உலகம்

வங்க தேசத்தை குறி வைத்துள்ள டெங்கு..!! அதிகரிக்கும் உயிர் இழப்பு எண்ணிக்கை..!! 

உலகம்

சிங்கப்பூரை ஆளப்போகும் இரண்டாவது தமிழர்… கோலகலமாக நடந்த பதவியேற்பு விழா..!

உலகம்

மெக்சிகோவில்  எலியன்  சடலம்  வைரலாகும்  படங்கள்..!!  பார்க்க  இங்க  க்ளிக் பண்ணுங்க..!!  

உலகம்

மோரோக்கோ நாட்டில்  தேசிய துக்க தினம் அறிவிப்பு..!!

அரசியல்

”மோடியிடம் வருத்தம் தெரிவித்தேன்”… பகீர் கிளப்பும் அமெரிக்க அதிபர்..!

Next Post

மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம்..! கண்ணீர் வடித்த ராணுவ வீரர்..!

Discussion about this post

19
Music

இதில் யாருடைய இசையில் மேஜிக் இருக்கிறது.

  • Trending
  • Comments
  • Latest

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

லேட்டா வந்தாலும்  பெஸ்ட்னு  சொல்ல வைக்கும்  விவோ v29 ப்ரோ..!! 

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பெண்களுக்கான  தடகள போட்டி..!! வெள்ளிப்பதக்கம் தட்டி சென்ற மாணவி..!!

பேராயத்தை இரண்டாகப் பிரிக்க சதி.. போராட்டத்தில் குதித்த பேராயத்தின் மாமன்ற உறுப்பினர்கள்..!

புரட்டாசி முதல் சனி என்றாலே இந்த திருத்தலத்தில் திருவிழா தான்..!!

மீண்டும் மணிப்பூரில் இன்று முதல் சேவை தொடக்கம்..?  

Trending News

பெண்களுக்கான  தடகள போட்டி..!! வெள்ளிப்பதக்கம் தட்டி சென்ற மாணவி..!!

பேராயத்தை இரண்டாகப் பிரிக்க சதி.. போராட்டத்தில் குதித்த பேராயத்தின் மாமன்ற உறுப்பினர்கள்..!

புரட்டாசி முதல் சனி என்றாலே இந்த திருத்தலத்தில் திருவிழா தான்..!!

மீண்டும் மணிப்பூரில் இன்று முதல் சேவை தொடக்கம்..?  

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
    • வைகோ
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
    • இன்று ஒரு தகவல்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.