ADVERTISEMENT
வேலூர் மாவட்டம் குடோனில் போதைப் பொருட்களை பறிமுதல்…
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே குடோனில் குட்கா பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரப் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளிலும் பள்ளிகள் அருகிலும் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது முஹம்மது பர்ஜான் என்பவர் நடத்தி வந்த கடையின் குடோனில் சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்ததோடு கடையின் உரிமையாளர் முஹம்மது பர்ஜானை கைது செய்த தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.