ஷம்புவில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகள் வீச்சு…
பஞ்சாப் – ஹரியானா எல்லை பகுதியான ஷம்புவில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகள் வீசியதால் பதற்றம் நிலவியது.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் 13 ஆம் தேதி முதல் ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் ஒன்றிய அரசுக்கு எதிராக டெல்லியை நோக்கி பேரணி நடத்தினர்.
இதற்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பலரும் டெல்லியை நோக்கி புறப்பட்டு வந்தனர்.
இதனையடுத்து டெல்லி நோக்கி முன்னேறிய விவசாயிகள் மீது காவல்துறையினர் சரமாரி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
டெல்லி – அம்பாலா நெடுஞ்சாலையில் அதாவது பஞ்சாப்-ஹரியானா எல்லையில் ஷம்பு என்ற இடத்தில் டெல்லி நோக்கி பல்லாயிரக்கணக்கான டிராக்டர்களில் சென்று கொண்டிருந்த விவசாயிகளை துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தினர்.
ஒவ்வொரு பகுதியிலும் காவல்துறையினர் விவசாயிகளை தடுத்து வருவதால் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியானவின் எல்லைப்பகுதி ஷம்புவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசினர்.
இது அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, போராட்டத்தில் பங்கேற்ற கியான் சிங் என்ற முதியவர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்து இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் விவசாயிகள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் ஆதரவு விவசாய தொழிற்சங்க அமைப்புகள் இணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
