பதுங்கி இருந்த கூலிப்படை.. பாய்ந்து பிடித்த காவல்துறை.. 12 பேர் கைது..!
சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் ரவுடி உட்பட 3 பேரை கொலை செய்ய, பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சென்னையின் பல்வேறு இடங்களிலும் உள்ள லாட்ஜ்களில் அறை எடுத்து பதுங்கி இருப்பதாக, வடக்கு மண்டல அதிதீவிர குற்றப்பிரிவு போலீசாருக்கு நேற்று முத்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவவலின் படி , அதிதீவிர குற்றப்பிரிவு போலீசார், அரும்பாக்கம், கே.கே.நகர், சாலிகிராமம், வியாசர்பாடி, நீலாங்கரை, அமைந்தகரை, சூளைமேடு, மடிப்பாக்கம், அசோக் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு, அறைகள் எடுத்து பதுங்கியிருந்த 12 ரவுடிகளை சுற்றி வளைத்த போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் அரும்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான கூலிப் படைத்தலைவன் ராதாவின் நெருகிய கூட்டாளிகள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, 12 ரவுடிகளையும் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஐர் படுத்தினர். அரும்பாக்கம் உதவி ஆணையர் ரமேஷ் தலைமையிலான போலீசார், 12 ரவுடிகளிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிரபல ரவுடி மெர்லின் விஜய், திருவொற்றியூர் நீதிமன்றத்திற்கு ஆஜராக வரும் பிரபல ரவுடி மற்றும் வழக்கறிஞர் உட்பட 3 பேரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டியது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து 12 ரவுடிகளையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த அவர்களிடமிருந்து 5 பட்டா கத்திகள், 12 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-பவானி கார்த்திக்