ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த பயணி.. முழித்ததும் காத்திருந்த அதிர்ச்சி..
சென்னை அண்ணாநகர் திருவள்ளுவர் குடியிருப்பைச் சேர்ந்தவர் வினோத் கண்ணா(45).இவர் சொந்த வேலை காரணமாக, திருவாரூருக்கு சென்று வேலை முடிந்தவுடன் 28-ம் தேதி இரவு சென்னை எழும்பூர் விரைவு ரயிலில் புறப்பட்டார்.
இவர், ரயிலில் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்தார். ரயில் புறப்பட்ட சில மணி நேரத்தில் தனது இருக்கையில் அவர் படுத்து உறங்கியருக்கிறார்.
மறுநாள் காலை 5 மணிக்கு ரயில் தாம்பரம் நிலையத்தை வந்தடைந்தபோது, அவர் எழுந்து தனது பையைத் தேடியுள்ளார்.எவ்வளவு தேடியும் பை கிடைக்கததால் அதிர்ச்சி அடைந்த அவர், எழும்பூர் ரயில்வே போலீஸில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், ரயில்வே காவல் ஆய்வாளர் மீனாட்சி வழக்குப் பதிவு செய்து விசாரனையை மேற்கொண்டார்.அதன்படி குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீஸார் முதலில் ஒவ்வொரு ரயில் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, ஒருநபர் பையை எடுத்துக்கொண்டு ரயிலிலிருந்து இறங்கிச் செல்வது தெரியவந்தது. அந்த நபரை தீவிரமாகத் தேடிவந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு எழும்பூர் ரயில் நிலையம் வந்த அவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் , அவரை எழும்பூர் ரயில்வே காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, அந்த நபர் திருச்சி மாவட்டம் தயானூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன்(28) என்பதும், ரயிலில் பயணிக்கும் பயணிகளின் பைகளைத் திருடி வந்ததும் தெரியவந்துள்ளது.
அவரிடமிருந்து இதுவரை 5 பயணிகளிடம் திருடப்பட்ட ரூ.3 லட்சம் ரொக்கம், 5.5 பவுன் எடை கொண்ட 2 தங்க நகைகள், 2 செல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
-பவானிகார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”