ADVERTISEMENT
மயிலாடுதுறையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகமா..???
மயிலாடுதுறையில் விரைவில் திறப்பு விழா காண உள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய ஆட்சியர் அலுவலகம் 114 கோடி திட்ட மதிப்பீட்டில் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
தரைத் தளத்துடன் 7 மாடி கட்டிடமாக கட்டப்பட்டுள்ள இக்கட்டிடத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டார்.
முடிவுற்ற பணிகள் குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் , சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் , துறை அதிகாரிகளுடன் கட்டிடத்தை திறப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து அக்கூட்டத்தில் ஆட்சியர் அலுவலக திறப்பு விழா குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)