கள்ளக்காதலியுடன் சென்ற கணவன்.. தேடி சென்ற மனைவி.. காத்திருந்த சோகம்..!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் வசித்து வரும் தம்பதியினர் மணிகண்டன்-சிவரஞ்சனி. எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் மணிகண்டனின் மனைவிக்கு தெரியவந்ததால் பிரச்சனை ஏற்பட்டது.
கள்ளக்காதலியை பிரிந்து இருக்க முடியாததால் வீட்டை விட்டு வெளியேறிய மணிகண்டன் சேலத்தில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கினர். இதனிடையே கணவரை காணவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்த மனைவி மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர்.அப்போது சேலம் மாவட்டத்தில் தங்கி இருப்பதை அறிந்து சிவரஞ்சனி அங்கு சென்றார்.
அப்போது கள்ளக்காதலியுடன் தங்கி இருந்த மணிகண்டனை தன்னோடு வரும்படி மனைவி அழைத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் பூலாம்பட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகில் விஷம் குடித்து மயங்கிய நிலை கிடந்தார்.
இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்