ADVERTISEMENT
கே.என்.நேரு,ரகுபதி,ஐ.பெரியசாமி,முன்னாள் அமைச்சர்கள் கோ.சி.மணி, குழந்தைவேலு மீது இருந்த சொத்துகுவிப்பு வழக்கு ரத்து..
அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் கோ.சி.மணி, குழந்தைவேலு ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துகுவிப்பு வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1996-2001 ஆண்டுகளில் திமுக அரசின்போது அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்ததாக அடுத்து வந்த அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது.
உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த 2009-ம் ஆண்டு ஆறுமுகம், கோவிந்தன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தீர்ப்பு அளித்துவிட்டதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)