வாழ்நாளையே தியாகம் செய்யும் தெய்வம் – தளபதி விஜய் வாழ்த்து..!!
அம்மன் கோவில் எல்லாமே என் அம்மா உந்தன் கோவில் அம்மா என்று சினிமாவில் வரும் பாடலுக்கு நிகராக அந்த பாடலில் இடம் பெற்றுள்ள வரிகளுக்கு ஏற்றது போல நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான இளைய தளபதி விஜய் அன்னையர் தினம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அழகிய தமிழ்மகன் படத்தில் வரும் ஒரு காட்சியில் மூன்றெழுத்து கவிதை ஒன்றை கேட்க அதற்கு தளபதி மூன்றெழுத்து கவிதை “அம்மா” என சொல்லுவார்.. திரைபடத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் அவர் அனைவரையும் மதித்து நடத்துவார் என தெரியும்.
சினிமாவில் மட்டும் அம்மாவிற்கு பாட்டு பாடினால் போதாது நிஜ வாழ்க்கையிலும் அம்மவிற்காக எதாவது செய்தாரா என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில்.., பெற்ற தாயை தெய்வகமாக மற்றும் பார்க்காமல் பெற்ற தாய்காக அவருக்கு பிடித்த சாய்பாபா கோவிலை கட்டி அனைவரையும் ஆச்சரியபட வைத்தார்..,
இதுகுறித்து தளபதியின் அம்மாவும் ஒரு பேட்டி ஒன்றில் எந்த சூழலிலும் விஜய் எங்களை வெறுத்து ஒதுக்கவில்லை.., இது அவருக்கு எதிராக பேசப்பட்ட விமர்சனம்., எப்பொழுதும் எங்கள் மீது விஜய்க்கு தனி பாசம் உண்டு என அவரும் கூறியிருந்தார்..
இன்று தமிழ்நாடு முழுவதும் அன்னையர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் “அன்பின் முழு உருவமாய் திகழ்ந்து குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் தம் வாழ்நாளையே தியாகம் செய்யும் தாய்மார்களுக்கு “அன்னையர் தினம்” வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் இன்றைய நாளில் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் “அன்னையரை” போற்றி வணங்குவோம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்..
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..