புதுச்சேரியில் 9 வயது சிறுமி காணவில்லை…
புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமியை கண்டுபிடிக்காத காவல் துறையினரை கண்டித்து பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி சோலை நகரை சேர்ந்தவர் நாராயணன், இவரது மனைவி மைதிலி இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், இரண்டாவது மகளான ஆர்த்தி அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முந்தினம் பிற்பகல் ஆர்த்தி அவரது வீட்டருகே விளையாடி கொண்டிருந்த போது, அவர் காணாமல் போனார்.
இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சிறுமி கடந்து சென்ற பாதைகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காணாமல் போன சிறுமியை இரண்டு நாட்கள் ஆகியும், தற்போது வரை கண்டுபிடிக்காததை கண்டித்து சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறி அனைவரையும் கலையச்செய்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.