காதலுக்கு NO சொன்ன பெண்.. தற்கொலை செய்த இளைஞர்..!
கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம் கனசவி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (22). இவர் தனது மூத்த அண்ணியின் தங்கையை காதலித்து வந்தார். இந்த நிலையில் தனது காதலை அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.
இதனால் மனஉளைச்சலில் இருந்த சந்தோஷ், தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதற்கு முன் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில், நான் ஒரு பைத்தியக்கார காதலன் என்பதால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்ற வாசகத்துடன் அவரது புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.
பின்னர் வீட்டில் யாரும் இல்லாததால் தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் அவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து முட்கல் காவல் நிலைய போலீஸார் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சந்தோஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் சந்தோஷ் தற்கொலை செய்த காரணம் காதல் தோல்வியா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்