உறவினர் பேச்சை கேட்டு கள்ளக் காதலை கைவிட்ட பெண்.. கொலை செய்த காதலன்..!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள சிறுகாம்பூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரின் மனைவி சுமதி. சலவை தொழிலாளியான ரவிக்குமார் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் வேலை செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனால் அவரின் மனைவி சுமதி கடந்த சில நாட்களாக திருச்சியில் உள்ள ஒரு ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்தநிலையில் இவருக்கும் வாழ்மால் பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து(வயது 30) என்பவருக்கும் செல்போன் மூலமாக தொடர்பு ஏற்பட்டு நாளடைவில் கள்ளக் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. நாளடைவில் இவர்களது கள்ளக்காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது.
இதனால் இதை நிறுத்தி கொள்ளுமாறு குடும்பத்தினர் சுமதியை கண்டித்துள்ளனர். இதனால் சுமதி, மாரிமுத்துவிடம் கள்ளத்தொடர்பை துண்டித்துக்கொள்ளலாம் என்று கூறி உள்ளார்.
அதன் பின்னர் மாரிமுத்து சுமதியை பார்க்க வந்தபோது அவர் பேச வில்லை. மேலும் மாரிமுத்துவின் செல்போன் அழைப்பையும் அவர் ஏற்கவில்லை. இதனை மாரிமுத்துவால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்துள்ளார்.
மேலும் சுமதியிடம் நேரில் வந்து உல்லாசத்திற்கு அழைத்த போதும் சுமதி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து, இன்று சிறுகாம்பூர் பேருந்து நிலையத்தில் கத்தியுடன் காத்திருந்து உள்ளார்.
வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக வந்த சுமதியை தனது கோபம் தீரும் வரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இரத்த வெள்ளத்தில் இருந்த சுமதி மயங்கி கீழே விழுத்துள்ளார்.
இதனை பார்த்த பொது மக்கள் மாரிமுத்துவை பிடித்து வைத்து வாத்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் சுமதியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
அதனை தொடர்ந்து மாரிமுத்துவை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்