பகையால் தம்பியை வெட்டிய கும்பல்… விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!
சென்னை கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகரை சேர்ந்தவர் தர்மா. கட்டிட வேலை செய்து வரும் இவர் இவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய நண்பர்கள் கிஷோர் மற்றும் கோகுல் ஆகியோருடன் சேர்ந்து கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தானர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் கையில் இருந்த கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுத பொருட்களை கொண்டு தர்மாவை சரமாரியாக வெட்டினர்.
சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிஷோர் மற்றும் கோகுல் இருவரும் கொலை கும்பலை தடுக்க முயன்ற நிலையில் அப்போது அவர்களையும் அந்த கும்பல் வெட்டி உள்ளது.
இதில் லேசான காயத்துடன் அவர்கள் உயிர்தப்பிய நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் “கொலையாளியான தர்மாவின் அண்ணன் சூர்யா அந்த பகுதியில் அடிதடி வழக்குகளில் ஏற்கனவே சிக்கி உள்ளார். இந்த நிலையில் முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் சூர்யாைவை தீர்த்து கட்ட வந்துள்ளனர்.
ஆனால் ஆள் மாறி அண்ணன் சூர்யாவுக்கு பதில் தம்பியான தர்மாவை வெட்டிக் கொன்றது” விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
இதனைத் தொடர்ந்து தப்பி ஓடிய கொலை கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்