எல்.கே.ஜி பிரிந்து போன தோழியை கண்டுபிடித்த தோழி..! 18 ஆண்டுக்கு பின் சேர்ந்த நட்பு..
பொதுவாக அனைவருக்கும் உயிர் நண்பர்கள் இருப்பார்கள்.., பள்ளி மற்றும் கல்லூரியில் பிரிந்து போன நண்பர்களுடன் இணைப்பில் இருப்போம். ஒரு சிலர் எப்பொழுது அவர்களுடன் பேசுவது வைத்துக்கொள்ள மாட்டார்கள், வழியில் எங்கேயாவது பார்த்தால் பேசுவது உண்டு.
ஆனால் பிரிந்து போன நண்பர்களை பற்றி ஒரு சிலர் கவலை கொள்ளுவதும் இல்லை, யாரும் அவர்களை தேடுவதும் இல்லை. இன்று டெக்னாலஜி இந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்று நம் அனைவருக்கும் தெரியும்.
இந்த டெக்னாலஜி மூலம், சிறுவயதில் பிரிந்து போன தன் பெண் தோழியை மற்றொரு தோழி கண்டு பிடித்துள்ளார்.
எல்.கே.ஜியில் நேஹா மற்றும் லக்ஷிதா என்ற இரு தோழிகள் ஒன்றாக படித்து வந்துள்ளனர். இரண்டு வருடங்களுக்கு பிறகு இருவரும் பிரிந்துள்ளனர்.., அந்த காலத்தில் அந்த அளவிற்கு டெக்னாலஜி டெவெலப்மென்ட் (technological development) இல்லாததால் பிரிந்து போன தோழியை கண்டு பிடிக்க முடியவில்லை.
technology வளர்ந்த பிறகும், ஃபேஸ் புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் தோழியை கண்டு பிடித்துள்ளார். ஒரே பெயரில் பலரும் இருந்ததால்.., குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் பாலோ செய்துள்ளார்.
இந்த முயற்சியும் தோல்வியில் முடிந்ததால்.., பிரிந்து சென்று தோழியுடன் சிறு வயதில் எடுத்த புகைபடத்தை இன்ஸ்டா ப்ரொபைல் போட்டோவாக வைத்து. சிறு வயதில் பிரிந்த என் தோழியை கண்டு பிடித்து கொடுங்கள், இப்பொழுது அவளுக்கு வயது 21, அவளின் சகோதரன் பெயர் குணால், என நேஹா இன்ஸ்டா நண்பர்களுக்கு தகவலை பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்ததும் பல லக்ஷிதா என்ற அக்கௌண்டில் இருந்து மெசேஜ் வந்துள்ளது.., அதில் அவர் தேடும் லக்ஷிதாவும் நீங்கள் தேடும் தோழி நான் தான் என்று மெசேஜ் செய்துள்ளார்.
இதுகுறித்து நேஹா ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.. இறுதியாக நான் உன்னை கண்டு பிடித்து விட்டேன். உன்னை கண்டுபிடிக்க எனக்கு 18 ஆண்டுகள் ஆனது, மீண்டும் உன் நட்பு கிடைத்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு நாங்கள் இருவரும் எல்.கே.ஜி படித்தோம். பின் ஒருநாள் லக்ஷிதா என்னை பிரிந்து.. ஜெய்ப்பூர் சென்று விட்டால், அன்று எங்கள் நட்பு பிரிந்து விட்டது மீண்டும் அந்த நட்பிற்காக.., 18 ஆண்டுகள் தேடினேன். சமூக வலைதளத்தின் மூலமாக மீண்டும் அந்த நட்பை பெற்றுவிட்டேன். என நேஹா இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போஸ்ட் இப்பொழுது வைரலாக பரவி வருகிறது.
நேஹாவின் இந்த பதிவை சுமார் 8லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கமெண்ட்டில் பாராட்டியும், அவர்கள் இழந்த நட்பு பற்றியும் பாராட்டி வருகின்றனர்.