தொடரும் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம்..! சோகத்தில் மூழ்கிய ராணிபேட்டை..!!
விவசாயிகள் உரிமை பெற்ற பட்டா நிலங்களை அனாதீனம் என்று அறிவித்ததைய உடனடியாக ரத்து செய்யவில்லை என்றால் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் பகிரங்க கோரிக்கை
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் 3,000 இருக்கும் மேற்பட்ட விவசாயிகளின் தலைமுறை தலைமுறையாக பட்டா இருக்கும் உரிமை நிலங்களை எல்லா ஆவணங்கள் இருந்தும் எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி 2019-ஆம் ஆண்டு சென்னை நில நிர்வாக துறை அதிகாரிகள் அனாதீனம் என்று அறிவிப்பு ஒன்றை பிறப்பித்து உத்தரவிட்டது.
இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டுமென தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் மாவட்ட நிர்வாகத்திடம் நடைநடையாக நடந்து பலமுறை மனுக்களை வழங்கியும் இதுநாள் வரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது..
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அனைவரும் கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக இணைந்து மாபெரும் காத்திருப்பு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்…அதேபோன்று ஆர்ப்பாட்டத்தில் போது ஒழுகூர் கிராமத்தில் நடராஜன் சாலம்மாள் விவசாயம் செய்து வந்த நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
அவர்களுக்கு தல இரண்டு ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும் என தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக விதமாக பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பியதோடு உடனடியாக அறிவிப்பினை ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் குடும்பத்துடன் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமர்ந்து மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்..
இந்த காத்திருப்பு போராட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க உறுப்பினர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..