ADVERTISEMENT
சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சொகுசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு…
தருமபுரி மாவட்டம் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சொகுசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த கங்களாபுரம் என்ற இடத்தில் பெங்களூரிலிருந்து கேரளா மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து திடீரென தீப்பற்றி எரியத் துவங்கியது.
இதில் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நிலையில், இது குறித்து தீயணைப்பு துறைவிற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில் பேருந்து முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இதனால் சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.