இந்திய ஜனநாயகத்தின் கருப்பு பக்கம்..! ஓம் பிர்லா பேச்சு..!
அவசர நிலை அமல்படுத்தப்பட்டது இந்திய ஜனநாயகத்தின் கருப்பு பக்கம் என்று ஓம் பிர்லாவின் பேச்சால் முதல் நாளிலேயே மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது .
மக்களவையில், அவசர நிலை குறித்தும், இந்திரா காந்தியை கண்டித்தும் சபாநாயகர் ஓம்பிர்லா பேசியதால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட முதல் நாளிலேயே ஓம்பிர்லாவின் பேச்சு சர்ச்சையானது.
நாடாளுமன்ற தொடக்க நாளில் அவசர நிலை குறித்து பிரதமர் பேசியது போல் சபாநாயகர் தனது பணியை தொடங்கிய முதல் நாளிலும் அவசர நிலை பற்றி பேசியுள்ளார். அவசர நிலை அமல்படுத்தப் பட்டபோது நடந்தவற்றை பிரதமர் சுட்டிக்காட்டி கூறியதை சபாநாயகர் ஓம்பிர்லா குறிப்பிட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்திரா காந்தியை கண்டித்து சபாநாயகர் ஓம்பிர்லா பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தை கண்டுகொள்ளாமல் சபாநாயகர் ஓம்பிர்லா தொடர்ந்து பேசினார். பின்னர் அவசரநிலை காலத்தில் உயிர் நீத்தவர்களுக்கு மக்களவையில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
வெ.லோகேஸ்வரி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..