சென்னை சென்ட்ரலில் கடத்தப்பட்ட குழந்தையை 4 மணி நேரத்தில் காவல்துறை கண்டுபிடித்தனர்.
ADVERTISEMENT
ஒடிசாவில் இருந்து நேற்று இரவு குழந்தையுடன் வந்த தம்பதி நந்தினி கண்காகர் – லங்கேஸ்வர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கி இருந்தனர். நள்ளிரவில் தூங்கி கொண்டு இருந்தபோது ஒரு மணி நேரத்தில் தம்பதியினரின் குழந்தை காணாமல் போயுள்ளது. திடீரென எழுந்து பார்த்த தம்பதியினர், குழந்தை காணவில்லை என தெரிந்ததும் அதிர்ச்சி .ரயில் நிலையம் முழுவதும் தேடி பார்த்த போதும் குழந்தை காணவில்லை என்பதால் சென்னை சென்ட்ரல் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்துள்ளனர்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், நள்ளிரவு ஒரு மணி அளவில் இருவரும் உறங்கி கொண்டு இருந்த போது, மர்ம நபர் ஒருவர் குழந்தையை எடுத்துச் சென்றதை கண்டறிந்தனர். அந்த மர்ம நபர் குழந்தையுடன் ஆட்டோவில் ஏறிச் சென்றதும் சிசிடிவி மூலம் கண்டறியப்பட்டது. உடனடியாக ஆட்டோ எண்ணை வைத்து விசாரித்த போலீசார் , ஆட்டோ ஓட்டுனரின் தகவலை கேட்டறிந்தனர். மேலும் விசாரணையின் போது, மர்ம நபரை ஆட்டோ ஓட்டுநர் செங்குன்றத்தில் இறக்கி விட்டது தெரியவந்தது.
இதையடுத்து, செங்குன்றத்திற்கு விரைந்த தனிப்படை போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் தம்பதி குழந்தையை கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை மடக்கி பிடித்து ஆண் குழந்தையை மீட்ட போலீசார், அந்த ஆண் குழந்தை ஒடிசா மாநில தம்பதியினரின் குழந்தை என்பதை உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து கடத்தல் தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் குழந்தை கடத்தல் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற உள்ளது. கைதானவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பரபாஸ் மெண்டல், நமீதாவை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தை கடத்தல் image widgetகுழந்தை கடத்தல் image widகுழந்தை கடத்தல்க்