திருப்பூர் வடக்கு தொகுதியில் அனுப்பர் பாளையதிலிருந்து மின் மயானம் வழியாக செல்லும் பாலத்தை உயர் மட்ட பாலமாக நிதி நிலைக்கு ஏற்ப மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கபடும் என அமைச்சர் எ வ வேலு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்ட பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் தொகுதிகுட்பட்ட மாநகராட்சி பகுதியில் உள்ள அனுப்பர் பாளையத்தில் இருந்து மின் மயானம் வழியாக செல்லும் தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றி அமைக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார் இதற்கு பதிலளித்து பேசிய பொது பணிதுறை அமைச்சர் எ வ வேலு..,
அனுப்பர் பாளையதிலிருந்து மின்மயானம் வழியாக செல்லும் பாலம் தரை பாலம் அல்ல மூழ்கு பாலம் 10 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பகுதியில் வெள்ளம் வந்தது இல்லை, இருப்பினும் திருப்பூர் புற வழி சாலை அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளது இதனை தொடர்ந்தும் போக்குவரத்து நெரிசல் அப்பகுதியில் ஏற்படும் பட்சத்தில் நிதி நிலைக்கு ஏற்ப உயர் மட்ட பாலம் அமைக்கப்படும்.
Discussion about this post