காதலியை அந்தரங்கமாக போட்டோ எடுத்த காதலன்..! போட்டு தள்ளிய தந்தை..! 7 பேருக்கு போலீஸ்..!..!
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகன் புவனேஸ்வரன் (25). இவர் திருப்பூரில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்துள்ளார்.
அப்போது அவருக்கு 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இவர்கள் இருவரும் அடிக்கடி சந்த்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர். அதனை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளார்.
இதனை அவர் தன்னுடைய நண்பர்களிடம் காண்பித்தபோது அவருடைய நண்பர் தமிழரசன் தன்னுடைய செல்போனிலும் அந்த வீடியோக்களை பதிவிறக்கம் செய்துள்ளார்.
அதன்பின் தமிழரசன் அந்த வீடியோக்களை சம்பந்தப்பட்ட மாணவியின் தந்தைக்கு அனுப்பியுள்ளார். அதன் பிறகு ரூ. 15,000 கொடுக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் இந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி எச்சரித்து அனுப்பினர்.
இந்த சம்பவத்திற்கு பிறகும் புவனேஸ்வரன் மாணவியுடன் தொடர்ந்து பழகியுள்ளார். அதோடு மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று வீடியோ மற்றும் படம் எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை புவனேஸ்வரனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து, அவர் தமிழரசனை சந்தித்து புவனேஸ்வரனை கொலை செய்யுமாறு கூறியுள்ளார். அவர்கள் கூலிப்படையை ஏவி புவனேஸ்வரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் தமிழரசன் வாலிபரை மது குடிக்க அழைத்து சென்ற நிலையில் இருவரும் சேர்ந்து மது குடித்துள்ளனர். பின்னர் காரில் தமிழரசன் அவரை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அவர் காரில் இருந்து இறங்கியதும் கூலிப்படையினர் அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தனர்.
தகவல் அறித்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புவனேஸ்வரனின் உடலை மீட்டு உட்ற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாகிய தமிழரசன், மற்றும் சிறுமியின் தந்தை உட்பட 7 பேரை தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது 7 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்