ஓவரான மகளிர் உரிமை தொகை..! இனி அடுத்த திட்டம் வந்தாச்சு..! தமிழக அரசின் அறிவிப்பு..!
தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கியது.., அதன்படி மகளிர் உரிமை தொகை திட்டமானது அதன் பின் விரிவாக்கம் செய்யப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் தான் தற்போது இன்னொரு இரண்டு திட்டங்கள் தமிழ்நாடு அரசால் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. அதன் மூலம் மக்களின் வங்கி கணக்கிற்கே மாதம் 2000 ரூபாய் தரவுள்ளது.
கலைஞர் உரிமை தொகை திட்டமானது நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. முதல்நாளான நேற்று புதிதாக இணைக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த ஒரு லட்சத்து 48 ஆயிரம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வரை 1.15 கோடி பேர், மகளிர் உரிமைத்தொகையை பெற்றுள்ளனர் தற்போது மேலும் 1 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு உரிமைத் தொகை தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அது போக அரசு பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு 2000 ரூபாய் உதவி தொகை பெறமுடியும். அதன்படி புதுமை பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. அதன் பின் மற்றொரு புதிய திட்டமாக “தமிழ் புதல்வன் திட்டம்” தொடங்கப்பட உள்ளது.
புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் தமிழ்நாடு பட்ஜெட்டில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்’ மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு திருமண உதவி தொகையும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்” என மாற்றுவதாக அறிவித்தார்.
அதன்படி அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூவாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை இந்த தொகை பெற்றுக்கொள்ள முடியும். மாணவிகள் அதற்காக எங்கும் செல்ல வேண்டியது இல்லை. நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளிலேயே பணம் செலுத்தப்படும். இதற்கு “புதுமைப்பெண் திட்டம்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுமைப்பெண் திட்டத்தை போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும்.. அதேபோல் தமிழ் புதல்வன் திட்டமும் விரைவில் தொடங்கப்படும். என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை பெருமளவில் கட்டுப்படுத்தி இருக்கிறோம். போதை பொருள் நடமாட்டம் என்பது சட்டம் – ஒழுங்குப் பிரச்சினை மட்டுமின்றி, சமூக ஒழுங்குப் பிரச்சினையும் கூட., போதைப் பொருள் நடமாட்டம் கண்டறியப்பட்டால் அதனை ஒழிக்க அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
“கலைஞர் கனவு இல்லம்” திட்டத்திற்கும், இரண்டரை லட்சம் தொகுப்பு வீடுகளைப் புனரமைக்கும் திட்டத்திற்கும் தனி கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ