தமிழகத்தை உலுக்கிய அந்த சம்பவம்.!! உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு..!!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புகழ்பெற்ற தனியார் கல்லூரி ஒன்றில் பணியாற்றி வரும் பேராசிரியர் நிர்மலா தேவி.., அதே பள்ளியில் பயிலும் சில மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்தியதாகவும், ஒரு சில பிரமுகர்களுக்கு மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
அதன் பெயரில் பேராசிரியர் நிர்மலா தேவியை கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்..
நிர்மலா தேவி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து போலீசார் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.., மாணவிகள் கொடுத்த வாக்குமூலங்களை வைத்து காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து கடந்த ஆறு ஆண்டுகளுக்கு வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.., அதற்கான தீர்ப்பு இன்று வெளியானது.
பேராசிரியர் நிர்மலா தேவி 2018ம் ஆண்டில் பயின்ற சில மாணவர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி சில அரசியல் பிரமுகர், உயர்கல்வித்துறையில் செல்வாக்கானர்வர்கள் பலருடன் பாலியல் ரீதியாக மாணவிகளை பயன்படுத்தியுள்ளார்..
இதை வாடிக்கையாக வைத்திருந்த நிர்மலா தேவி மற்ற மாணவர்களிடம் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.., அதற்கு சம்மதிக்காத மாணவர்கள், அவர் பேசியதை ஆடியோவாக பதிவு செய்து பெற்றோர்கள் மூலம் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்..
ஆனால் நிர்மலா தேவி மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளாததால்.., அதன் பின் உயர்அதிகாரிகளிடம் மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அவர்கள் நடத்திய விசாரணையில் ஆளுநர் மீது குற்றம் சாட்டப்பட்டதால் ஆளுநர் மாளிகையில் அந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்திடம் அந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.
ஒரு விசாரணைக்குழுவை அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார். அதனால் தமிழக முழுவதும் அந்த வழக்கு பேசும் பொருள் ஆனது குறிப்பாக அரசியல் பிரமுகர்களிடையே நிர்மலா தேவி வழக்கு சி.பி, சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அப்போதே பல திடுக்கிடும் தகவல்கள் வெளியனானது, அப்போதைய முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கு குறித்து நடவடிக்கை மேற்கொள்ளாததால். திமுக தலைமையிலான அரசியல் கட்சி அமைச்சர்கள் மேற்கொண்ட நடவடிக்கையினால் அந்த வழக்கில் நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
அதன் பின் 3 பேரும் ஜாமீனில் வெளிவந்தனர்.. இருப்பினும் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது.
நிர்மலா தேவி உட்பட 3 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பப் பரிமாற்ற முறைகேடு தடுப்புச் சட்டம் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தற்போது அந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி பகவதி அம்மாள் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.., விசாரணை நிறைவுபெற்ற நிலையில், கடந்த ஏப்ரல் 29ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இன்று மீண்டும் நீதிபதி பகவதியம்மாள் முன் வழக்கு தொடரப்பட்டது. கல்லூரி மாணவிகளை நடத்தியதாக வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு வெளியானாலும் அவர்களுக்கான தண்டனை என்ன என்பது பற்றி அவர் குறிப்பிடவில்லை.., அதே சமயம் பிற்பகல் 2.30 மணிக்கு மேல் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் கூறியிருந்தார்.
1330 குற்றப்பத்திறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து.., இன்று நீதிமன்றத்தில் நிர்மலாதேவி ஆஜராகததால் வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.., அதே சமயம் 2வது மற்றும் 3வது குற்றவாளிகள் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..