பாஜகவிற்கு வேலை பார்த்த அந்த கருப்பு ஆடு..? எச்சரித்த ஸ்டாலின்..!!
லோக்சபா தேர்தல் பணி மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் திமுக நிர்வாகிகள் ஒரு சிலரை முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
தினமும் பிரச்சாரத்திற்கு இடையே நேரம் கிடைக்கும் போதே மாவட்ட செயாளர்களுடன் காணொலி காட்சிகள் வாயிலாக தேர்தல் குறித்த விவாதங்களை கேட்டறிந்து எப்படி செய்லபட வேண்டும், வேட்பாளர்கள் பிரச்சாரம் குறித்தும் தேர்தல் களநிலவரம் குறித்தும் மாவட்ட செயலாளர்களின் கருத்துக்களை கேட்டு செயல்பட்டு வருகிறார்.
மேலும், திமுக வேட்பாளர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது மட்டுமல்லாமல் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எப்படி ஜெயிக்க வைக்க வேண்டும் என்றும், திமுக கூட்டணி மீது எதிர்கட்சி வைக்கும் குற்றச்சாட்டுகளை முறி அடித்து, நாம் ஜெயிக்க வேண்டும். முக்கியமாக பிற கட்சிகளுக்காக பாடுபடுவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவீர்கள். அவர்களை நான் எச்சரிக்கிறேன்.
யார் யார் பாஜகவிற்கு வேலை பார்க்கிறார்கள் என எங்களுக்கு தெரியும். அதை இப்போதே நிறுத்துக்கொள்ளுங்கள். மீண்டும் அவர்கள் மீதான குற்றச்சாட்டு எனக்கு தெரிய வந்தால் மாவட்ட செயாளர் பதவியில் இருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். ஸ்டாலின் எச்சரிக்கை கொடுத்துள்ளதாக இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட சில நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், ஒரு நாளைக்கு 2 தொகுதிகளுக்கு மேல் பிரச்சாரம் செய்து வருகிறார். அதே சமயம் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளையும் அரவணைத்து வேட்பாளர் அறிமுக கூட்டங்களை திமுக நடத்தி வருவதையும் உன்னிப்பாக கவனித்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின், இத்தகைய கூட்டங்களில் சர்ச்சைகள், வருத்தங்கள், ஆதங்கங்கள், என எதுவாக இருந்தாலும் ஸ்டாலினுக்கு உடனடியாக தெரியப்படுத்தும் படி கூறினார்.
தங்களின் நிறை குறைகள் ஸ்டாலின் கவனத்திற்கு சென்றதுமே, 24 மணி நேரத்திற்குள் சம்மந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு பேசி முழு வீச்சில் ஈடுபட்டு உங்களின் குறைகளை நிறைவேற்றி தருவதாக அவர் கூறினார்.
குறிப்பாக எச்சரிக்கை செய்ய வேண்டியவர்களுக்கு எச்சரிக்கையும், கண்டிக்க வேண்டியவர்களுக்கு கண்டிப்பும், கனிவாக பேசப்பட வேண்டியவர்களிடம் கனிவாகவும் என பல்வேறு நவரச முகங்களைக் காட்டுகிறார்.
லோக்சபா தேர்தல் பணிகளுக்கு இடையில் திமுக நிர்வாகிகள் சிலரிடம் முதலமைச்சார் ஸ்டாலின் சிலரை எச்சரித்துள்ளார். திருநெல்வேலி சிட்டிங் எம்பி ஞான திரவியம். அவரை பற்றி எடுக்கப்பட்ட சர்வேயில் வெற்றி வாய்ப்பு இல்லை என்றும் காங்கிரசுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் ஸ்டாலினுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனால் அந்த தொகுதியை காங்கிரசிற்கு திமுக கொடுத்துள்ளது ஆனால் அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடைசியில் இரண்டு நாட்களுக்கு முன் அங்கே ராபர்ட் ப்ரூஸ் போட்டியிட போவதாக சில தகவல் வெளியானது. ஆனால் அவர் நெல்லையே சேர்ந்த வேட்பாளர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராபர்ட் ப்ரூஸ் கன்னியகுமாரியை சேர்ந்த ஒருவர் நெல்லை ஏன் நிற்க வேண்டுமென சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.. அதனால் கடுப்பான சில திமுக நிர்வாகிகள் ஒரு சிலர் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு வேலைபார்த்து வருவதாக கூறியுள்ளனர்.
காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டாமல், நயினாருக்கு வேலை பார்த்து வருவதாக ஒருசிலர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.இதைப்பற்றி நிர்வாகிகளிடம் பேசிய ஸ்டாலின் இங்கே சிலர் நயினார் நாகேந்திரனுக்கு வேலை செய்வதை கேள்வி பட்டேன். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போகிறோம். சிலர் கூட்டணி கட்சிகளுக்கு வேலை செய்யாமல் எதிர்க்கட்சி களுக்கு வேலை பார்த்து வருகிறார்கள்.
இதை எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது. எனக்கு கிடைத்த தகவலுடன் சில ஆதாரங்களும் இருக்கிறது. 40க்கு 40 எடுப்பதே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும். அதற்காக மட்டும் வேலை பாருங்கள். கூட்டணி வெற்றி பெற என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்கள். இல்லை திமுக கூட்டணிக்கு வேலை பார்க்க முடியாது என்றால் கட்சியை விட்டே செல்லுங்கள். ஒரு கட்சியில் இருந்துகொண்டு எதிர்கட்சிக்கு வேலை பார்ப்பது இந்த வேலை எல்லாம் இங்கே செய்ய வேண்டாம் என கடுமையாக நிர்வாகிகளை கண்டித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.