“டாடா குழுமம்” பெண்களுக்கே முன் உரிமை..!! 9 ஆயிரம் கோடி முதலீடு..!!
ராணிபேட்டையில் 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் புதிதாக வரவுள்ள டாடாவின் கார் தொழிற்சாலை நிறுவனத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டவுள்ளார்.. இந்த திட்டத்தின் மூலம் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் 9,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உற்பத்தி செய்வதற்கான ஆலையை ராணிபேட்டை மாவட்டத்தில் நிறுவ திட்டமிட்டுள்ளது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் வருகின்ற செப்டம்பர் மாதம் 28ம் தேதி அடிக்கல் நாட்டுவுள்ளார்.
இந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிறுவனமானது மிக விலை உயர்ந்த ஆடம்பர கார்களை மட்டுமே உற்பத்தி செய்து வருகிறது. தமிழ்நாட்டில் புதிய தொழில்களை தொடங்கு வதற்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன், பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்து வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களை ஈற்பதற்காக அமெரிக்க அரசு முறை பயணம் மேற்கொண்டார்.. கடந்த 19 நாட்களில் அமெரிக்க நாட்டிற்கு முதல்வர் பயணம் மேற்கொண்டார்..
சென்னை மறைமலைநகரில் கார் உற்பத்தியில் சிறந்து விளங்கும் போர்டு நிறுவனம், முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று புதிய கார் உற்பத்தி ஆலையை தொடங்க திட்டமிட்டது. தமிழ்நாட்டில் மற்றொரு கார் உற்பத்தி ஆலையை தொடங்குவதற்காக 9,000 கோடி ரூபாய் முதலீட்டில் கடந்த மார்ச் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த திட்டத்தின் மூலம் 5000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
இப்படி இருக்கையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யா டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ஆண்டுக்கு 2 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளது.. அதில் 25% ஜாகுவார் லேண்ட் ரோவர் எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்யப்படும் எனவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.. எலெக்ட்ரிக் கார்கள் உட்பட மற்ற கார்களும் உற்பத்தி செய்ய போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. வருகின்ற 2026ம் ஆண்டுக்குள் 75% கார்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்றப்படும் என ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிறுவனமானது சென்னைையை அடுத்த ராணிப்பேட்டையில் பனப்பாக்கத்தில் ரூ.9000 கோடியில் 400 ஏக்கரில் அமைய உள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.. அதேபோல் 400 கோடி ரூபாய் முதலீட்டில் பனப்பாக்கத்தில் அமைய உள்ள காலணி பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவங்கி வைக்கவுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது..
* 9,000 கோடி ரூபாய் முதலீட்டில் 400 ஏக்கரில் ராணிப்பேட்டையில் இந்த கார் ஆலை அமைய உள்ளது.
* இந்த ஆலையில், ஜாகுவார் லேண்ட் ரோவர் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டம்.
* ஆலையின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 2 லட்சம் கார்களாக இருக்கும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..