அரியலூர், கடலூர், நாகை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருப்பூர், சிவகங்கை, தஞ்சை, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங், உதய்சந்திரன் உள்ளிட்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் துறைகள் மாற்றப்பட்டன. தற்போது தமிழ்நாடு அரசின் அடுத்த அதிரடியாக 16 மாவட்டங்களுக்கான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
- நாகை ஆட்சியர் அருண் தம்புராஜ் கடலூர் ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணைச் செயலாளரான ஆனி மேரி ஸ்வர்ணா அரியலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- கிருஷ்ணகிரி ஆட்சியர் தீபக் ஜேகப் தஞ்சை மாவட்ட ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- வணிகவரி வரி புலனாய்வு பிரிவு இணை ஆணையர் மெர்சி ரம்யா புதுக்கோட்டை ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்ட இயக்குநர் உமா, நாமக்கல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- நில அளவை மற்றும் நிலப் பதிவேடுகள் கூடுதல் இயக்குநர் டிஎம்டி. கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேசன் மேலாண்மை இயக்குநர் கமல் கிஷோர் செங்கல்பட்டு ஆட்சியராகவும், சென்னை வணிக வரி நிர்வாகப் பிரிவு இணை ஆணையர் சங்கீதா மதுரை ஆட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- வழிகாட்டுதல் துறை செயல் இயக்குநர் ஆஷா அஜித் சிவகங்கை ஆட்சியராகவும், நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையர் விஷ்ணு சந்திரன் ராமநாதபுரம் ஆட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ராகுல்நாத் தூத்துக்குடி ஆட்சியராகவும், சேலம் மாநகராட்சி ஆணையர் கிருஸ்துராஜ் திருப்பூர் ஆட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றக செயல் இயக்குநர் ராஜ கோபால் சுங்கரா ஈரோடு ஆட்சியராகவும், சேலம் சாகோசேர்வ் கூட்டுறவு சொசைட்டி மேலாண்மை இயக்குநர் பூங்கொடி திண்டுக்கல் ஆட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் நாகை ஆட்சியராகவும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் இணை மேலாண் இயக்குநர் சராயு கிருஷ்ணகிரி ஆட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.