தமிழ்நாடு அமைச்சரவை சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், விரைவில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்படுவார்கள் என்ற தகவல்கள் வெளியாகின. தற்போது அதனை மெய்ப்பிக்கும் வகையில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்மைச் செயலாளராக இருந்த உதயச்சந்திரன் நிதித்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மூத்த ஐஏஎஸ் அதிகாரியான முருகானந்தம் முதல்வரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நிதித்துறை செயலாளராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
- உள்துறை செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸும், ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக
- பொதுப்பணித்துறை செயலாளராக சந்திரமோகனும், மணிவாசகன் அறநிலையத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்லார்.
- சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்து வந்த ககன்தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராகவும், ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- கூட்டுறவு உணவு மற்றம் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக ஜெகன்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளராக நந்தகுமாரும், பொருளாதார மற்றும் புள்ளியியல் இயக்குநராக கணேஷும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையராக மைதிலி ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.