Wednesday, September 27, 2023
Madhimugam
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
    • வைகோ
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
    • இன்று ஒரு தகவல்
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
    • வைகோ
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
    • இன்று ஒரு தகவல்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

தொழிலாளர்கள் கொண்டாட்டம்; 12 மணி நேர வேலை மசோதா நிறுத்திவைப்பு!

April 24, 2023
Tamilnadu

RelatedPosts

1000 புதிய வகுப்பறைகள்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறப்பு..!! எந்த மாவட்டத்தில் தெரியுமா..?  

கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை..!! உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவு..!!

மக்களின் பிரச்சனைக்காக போராட்டத்தில் இறங்கிய துரை வைகோ..!! 

0
(0)

தமிழ்நாடு அரசு கொண்டு வந்த 12 நேர வேலை மசோதா நிறுத்திவைக்கப்படுவதாக முதல்வர் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணி துறை அமைச்சர், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை அமைச்சர், தலைமைச் செயலர், தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறைசெயலர், தொழிலாளர் நலத் துறைஆணையர் ஆகியோர் முன்னிலையில் தமிழகத்தின் முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

இதனையடுத்து தமிழ்நாட்டில் 12 மணி நேர வேலை மசோதா நிறுத்திவைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில், கடந்த 21-4-2023 அன்று “2023-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டப்பேரவை சட்டமுன்வடிவு எண் 8/2023)”. தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்த்திடவும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினைப் பெருக்கிடவும், குறிப்பாக தென் மற்றும் வட மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திடும் நோக்கிலும் தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டது.

தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இச்சட்டத்தில் இருந்தாலும், சில தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், தலைமைச் செயலகத்தில் இன்று (24-4-2023) பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் “2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டப்பேரவை சட்டமுன்வடிவு எண்.8/2023)”- என்ற சட்டமுன்வடிவின் முக்கியமான பிரிவுகளில், குறிப்பாக தொழிலாளர் நலன் சார்ந்து, அவர்கள் பணிபுரிவதற்கான உகந்த பணிச்சூழல், தொழிலாளர்களுக்குப் போக்குவரத்து வசதி உள்ளிட்ட தொழிலாளர் நலன்கள் குறித்தும், இச்சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்தும் விரிவாக தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டில் உள்ள மிகச்சில குறிப்பிட்ட வகை தொழிற்சாலைகளுக்கு மட்டுமே நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் அரசின் பரிசீலனைக்குப் பின்பே பணி நேரம் குறித்த விதிவிலக்கு வழங்கப்படும் என்றும் எந்தச் சூழ்நிலையிலும், தொழிலாளர்களின் நலனில் சமரசம் செய்துகொள்ளப்பட மாட்டாது என்றும் அமைச்சர்கள் தெளிவாக எடுத்துரைத்தனர்.

மேலும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி. இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களைப் பற்றி மிகுந்த அக்கறை கொண்டுள்ள இந்த அரசு தொழிலாளர் நலன் காக்கப்பட வேண்டும் என்பதிலும் அதே அளவு அக்கறை கொண்டுள்ளது என்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் அமைச்சர் பெருமக்கள் எடுத்துக்கூறினார்கள்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இச்சட்டமுன்வடிவினை நடைமுறைப்படுத்தினால் தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள். சிரமங்கள் குறித்து விவரமாக எடுத்துரைத்து, தங்களுடைய கருத்துக்களை அரசு பரிசீலிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர்..

ஒரு நாட்டின் தொழில் வளம். பொருளாதார முன்னேற்றம் மற்றும் தொழில் அமைதி ஆகிய மூன்றும் ஒன்றையொன்று சார்ந்தவை: தொழில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கின்ற அதே நேரத்தில், தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பேணுவதும் அரசின் நோக்கமாகும். நாட்டில் தொழிற்சாலைகள் பெருகுவதற்கு அங்கு தொழில் அமைதி மிக அவசியமானது.

தொழிலாளர் நலன் காக்கப்பட்டால்தான் தொழில் அமைதி நிலவும் என்பதை உணர்ந்து திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வருகிறதோ அப்போதெல்லாம் தொழிலாளர் நலன் பேணும் அரசாகவே செயல்பட்டு வந்துள்ளது. தற்போது அதே சிந்தனையைத் தாங்கி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்துத் தந்த பாதையில், அதன் அடியொற்றி இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

நலவாரியம், மாற்றுத் திறனாளிகள் நலவாரியம், கிராமக் கோயில் பூசாரிகள் நலவாரியம், நரிக்குறவர் நலவாரியம், தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியம் உள்ளிட்ட 36 அமைப்புசாரா நலவாரியங்களை உருவாக்கி உதவிகள் செய்தது தி.மு.க. அரசு,

1990ஆம் ஆண்டு மேதின நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை நேப்பியர் பூங்காவிற்கு “மேதினப் பூங்கா”எனப் பெயரிட்டு, மேதின நினைவுச் சின்னத்தை நிறுவியர் கலைஞர்.

வேலைவாய்ப்பற்றோர் நிவாரண உதவித் தொகைத் திட்டத்தை

அறிமுகப்படுத்தியது திமுக அரசு தான்.

முந்தைய கழக ஆட்சியின்போது, அகில இந்திய அளவில் ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியினை ஆராய்ந்து இந்திய தொழிற்குழுமம் (ConfederationOr Indian Industry) ஒரு அறிக்கை தயார் செய்தது. அந்த அறிக்கையில், இந்தியாவிலேயே தொழில் அமைதி நிலவுவதிலும் தொழிலாளர் நலன்களை பாதுகாப்பதிலும் தமிழகம் முதல் இடம் வகிக்கின்றது என்றும் குஜராத் இரண்டாவது இடம் என்றும் ஆந்திரப் பிரதேசம் மூன்றாவது இடம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போதும், கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழ்நாட்டில் நிலவும் அமைதியான தொழிற்சூழலின் காரணமாகவே.

தொடர்ச்சியாக பல்வேறு பன்னாட்டு மற்றும் இந்தியப் பெருந்தொழில் நிறுவனங்கள் முதலீடுகள் செய்து அதன்மூலம் நமது இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர்.

சுயமரியாதைச்சுடர் தந்தை பெரியார். பேரறிஞர் பெருந்தகை அண்ணா, நல்லாட்சி தந்த நாயகராகவும், நற்றமிழ் வளர்த்த புரவலராகவும். சொல்லாலும், செயலாலும், எழுத்தாலும் தமிழ் வளர்த்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் முனைப்போடு செயல்பட்டு வரக்கூடிய இந்த அரசு ஒரு சட்டமுன்வடிவை எந்த அளவு உறுதியுடன் கொண்டு வருகின்றதோ, அது குறித்து மக்களிடம் ஏதேனும் மாற்றுக் கருத்துக்கள் வரப்பெற்றால். அவற்றைச் சீர்தூக்கி ஆராய்ந்து, அவர்களின் கருத்துக்களுக்கிணங்க அவற்றிற்கு

மதிப்பளிக்கும் வகையில் நடந்துகொள்வதிலும் அதே அளவு உறுதி காணப்பட வேண்டும்.

அந்த வகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது பல்வேறு தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், “2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டப்பேரவை சட்டமுன்வடிவு கஎண்.8/2029″- என்ற சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது.

Loading

How useful was this post?

Click on a star to rate it!

ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Tags: 12 hours work bill12 மணி நேர வேலைMK StalinTamilnadu governmentதமிழ்நாடுமுதல்வர் மு.க.ஸ்டாலின்
ADVERTISEMENT
Previous Post

ஐபிஎல் ஓய்வு குறித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தோனி – ரசிகர்கள் அதிர்ச்சி!

Next Post

தமிழ் மீது பிற மொழியை திணிக்கக்கூடாது – திமுக எம்.பி. திருச்சி சிவா ஆவேசம்!

Related Posts

அரசியல்

1000 புதிய வகுப்பறைகள்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறப்பு..!! எந்த மாவட்டத்தில் தெரியுமா..?  

அரசியல்

கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை..!! உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவு..!!

அரசியல்

மக்களின் பிரச்சனைக்காக போராட்டத்தில் இறங்கிய துரை வைகோ..!! 

அரசியல்

பாஜகவுடன் கூட்டணி இல்லை..!! பாஜகவை யாரும் விமர்சிக்க கூடாது..!! எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு..!!

அரசியல்

போச்சா… அடாவடியான அண்ணாமலை பேச்சால்.. மொத்தமாக முறிந்த கூட்டணி… அதிமுக தலைமை எடுத்த அதிரடி முடிவு..!

அரசியல்

வருகைப் பதிவேட்டில் குளறுபடி.. ஆய்வில் சிக்கிய வார்டன்.. அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு..!

அரசியல்

முதல்வரின் மகத்தான அறிவிப்பு.. பாராட்டும் மநீம தலைவர் கமல்ஹாசன்..!

அரசியல்

உயிருக்கு போராடிய மூதாட்டிக்கு உதவி செய்த துரை வைகோ.. வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்..!

அரசியல்

பிரபல போத்தீஸ் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..!

Next Post
trichy siva

தமிழ் மீது பிற மொழியை திணிக்கக்கூடாது - திமுக எம்.பி. திருச்சி சிவா ஆவேசம்!

Discussion about this post

23
Music

இதில் யாருடைய இசையில் மேஜிக் இருக்கிறது.

  • Trending
  • Comments
  • Latest

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

லேட்டா வந்தாலும்  பெஸ்ட்னு  சொல்ல வைக்கும்  விவோ v29 ப்ரோ..!! 

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

மாதவிடாய் காலங்களில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா..?

கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்து வைத்த கிருத்திகா உதயநிதி..!!  

1000 புதிய வகுப்பறைகள்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறப்பு..!! எந்த மாவட்டத்தில் தெரியுமா..?  

டெங்குவை ஒழிக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன்  எடுக்க போகும் அடுத்தகட்ட   நடவடிக்கை..? 

Trending News

மாதவிடாய் காலங்களில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா..?

கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்து வைத்த கிருத்திகா உதயநிதி..!!  

1000 புதிய வகுப்பறைகள்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறப்பு..!! எந்த மாவட்டத்தில் தெரியுமா..?  

டெங்குவை ஒழிக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன்  எடுக்க போகும் அடுத்தகட்ட   நடவடிக்கை..? 

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
    • வைகோ
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
    • இன்று ஒரு தகவல்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.