இலங்கை சிறையில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிய தமிழக மீனவர்கள்..!!
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அடிக்கடி தமிழக மீனவர்களை கைது செய்து வருகின்றனர்.. இந்த கொடூர செயல் பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது..
கடந்த ஜூன் 23ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது கோடியக்கரை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மூன்று படகுகள் மட்டும் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த செய்தியை கேட்ட தமிழக முதலைமைச்சர் ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதன் பின் மத்திய அரசுடன், இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே., கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி 17 மீனவர்கள் விடுவிக்கப்படுவதாக ஊர்காவல் படை நீதிபதி நீதிமன்றத்தில் அறிவித்திருந்தது.
அதன்படி இலங்கை சிறையில் இருந்து 14 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.. இலங்கை கொழும்பிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அந்த விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்று , அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலம், அவர்கள் சொந்த ஊரான ராமேஸ்வரம், புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.