தேசிய மருத்துவ ஆணையத்திற்கு தமிழ்நாடு மருத்துவத்துறை செக்..!!
தமிழ்நாட்டில் காலியாக உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை மாநிலத்துக்கே வழங்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையத்திற்கு தமிழ்நாடு மருத்துவத்துறை கடிதம் எழுதியுள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய எம்.பி.பி.எஸ் (MBBS) இடங்களில், 83 இடங்கள் 4 கட்ட கலந்தாய்விலும் நிரம்பவில்லை என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை மாநிலத்துக்கே வழங்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையத்திற்கு தமிழ்நாடு மருத்துவத்துறை கடிதம் எழுதியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ இடங்கள் வீணாவதை தடுக்க வலியுறுத்தியும், காலியாக உள்ள இடங்களை மாநிலத்திற்கே வழங்கவும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்ப மருத்துவத்துறை முடிவு எடுத்துள்ளது…
Discussion about this post