திருச்சி புதிய பேருந்து நிலைய பணிகளை கே.என்.நேரு தொடங்கி வைத்தார்..
திருச்சி மாவட்டம் புதிய பேருந்து நிலையத்திற்கான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இறங்கி செல்ல ஏதுவாக பேருந்து நிலையம் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
இதனால் ஸ்ரீரங்கத்தில் உள்ளூர் பேருந்து நிலையம் கட்டப்பட வேண்டும் என அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஶ்ரீரங்கத்தில் 11.10 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி துவக்க விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.