தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணாமலை ’’என் மண் என் மக்கள்’’ எனும் தலைப்பில் தமிழகம் முழுவதும் பாத யாத்திரையில் ஈடுப்பட்டு வருகிறார். நேற்றும் இன்றும் மதுரையில் உள்ள தொகுதிகளில் பாத யாத்திரை சென்று வருகிறார். இந்நிலையில் திடீரென டெல்லிக்கு பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சமீபக் காலமாக கூட்டணியில் இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்களிடையும் அண்ணாமலை இடையும் கருத்துப் போர் நிலவி வருகிறது. இரண்டு நாட்களாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ – அண்ணாமலை இருவரும் தங்களை ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த வேளையில் தான் பாஜக தேசிய தலைவர் நட்டா அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அண்ணாமலை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.