பொன்னேரியில் திடீர் சாலை மறியல்..!! பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை..!!
திருவள்ளூர் மாவட்டம், நாலூர் ஊராட்சியில் பத்தாண்டு களுக்கு மேலாக சாலை பழுதாகி குண்டும், குழியுமாக இருப்பதை உடனடியாக சரிசெய்து தரவேண்டி சாலை மறியல் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர், ஜெயராம்புரம், கம்மார் பாளையம் பகுதியில் 1000 க்கும் மேற்பட்ட வீடுகள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் இப்பகுதி மக்கள் நாலூர் ஏரிக்கரை கம்மார் பாளையம் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இச்சாலையில் கம்பெனிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் செல்வதன் காரணமாக சாலை முழுவதும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதால் மழைநீர் தேங்கியும், அடிக்கடி விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை காணப்படுவதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலையை சீர் படுத்த கோரி பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்தும் நாலூர் அண்ணாநகர், ஜெயராம்புரம், பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நாளூர் ஏரிக்கரை கம்மார் பாளையம் சாலை அண்ணாநகரில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மீஞ்சூர் காவல் ஆய்வாளர் காளிராஜ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் களிடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பேசி சமாதானம் செய்தார்.