கள்ளிப்பால் குடித்த மாணவர்கள்..!! மாணவர்களின் உடல் நிலை..?
அரியலூர் அருகே கள்ளிப்பால் சாப்பிட்ட 5 மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
அரியலூர் மாவட்டம் குணமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது அரசு தொடக்கப்பள்ளி இப்பள்ளியில் 84 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் நான்கு பேரும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒருமாணவரும் கள்ளிப்பால் சாப்பிட்டுள்ளனர்.
அப்போது பணியில் இருந்த இல்லம் தேடி கல்வி ஆசிரியரிடம் மாணவர்கள் கள்ளிப்பால் சாப்பிட்டதை கூறியுள்ளனர்.. இதனை அடுத்து ஆசிரியர் உடனடியாக குணமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.
அதனைத்தொடர்ந்து 108 அவசர ஊர்தி மூலம் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் தொடர்ந்து மருத்துவர் கண்காணிப்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்..
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர்., வழக்கு பதிவு செய்து இது மாணவர்கள் யார் கொடுத்தது அல்லது மாணவர்களே அதை சாப்பிட்டார்களா என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..