பிரபல ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பலியான மாணவர்கள்..! கைது செய்யப்பட்ட 5 பேர்..! பின்னணியில் வெளிவந்த உண்மை..!
டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள பழைய ராஜேந்திர நகரில் “ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையம்” பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை 27ம் தேதி அன்று இரவு பெய்த தொடர் கனமழையால் கீழ் தளத்தில் திடீரென மழைநீர் புகுந்துள்ளது. அதில் இரண்டு மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிர் இழந்த மாணவர்களுக்கு இழப்பீடு கேட்டு தொடர்ந்து அப்பகுதியில் யுபிஎஸ்சி உள்ளிட்ட அரசுத் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தொடர்ந்து இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் தேர்வு மையத்தின் உரிமையாளர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோரை டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல், அந்த மையத்தின் மூன்று தரைத்தளங்கள் மற்றும் 7 கட்டடங்களுக்கு விதிமீறல் தொடர்பாக டெல்லி மாநகராட்சி சீல் வைத்துள்ளது.
மறுபக்கம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று இறந்த மாணவர்களின் குடும்பத்தினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், குறிப்பிட்டிருப்பதாவது ” ஜூன் 26ம் தேதியன்று அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கத் தவறிய டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும். ராஜேந்திர நகரில் நடைபெற்ற சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ள விவகாரம் உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
மற்றும் டெல்லியில் உள்ள ஒவ்வொரு மாவட்டம் ரீதியாக உயர்மட்டக் குழு அமைத்து சட்டவிரோதமாக விதிமீறலுடன் கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டடங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அது தொடர்பாக பேசிய டெல்லி மத்திய காவல் துணை ஆணையர் எம் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், “ராஜேந்திர நகர் விவகாரம் தொடர்பாக தற்போது 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மேலும், அந்த மழைநீரில் கார் ஒன்று தத்தளித்ததால் தண்ணீர் வரத்து அதிகரித்து அடித்தளத்தின் கதவு இடிந்து விழுந்ததுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே, இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி எம்பி ஸ்வாதி மாலிவால் மாநிலங்களவையில் நோட்டீஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், ராஜேந்திர நகர் விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கான நீதி மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Former Chairperson DCW & RS MP @SwatiJaiHind filed a suspension of business notice in the Parliament today to discuss the tragic death of three #UPSCaspirants in #RajendraNagar !! pic.twitter.com/jH8QLyDDJ9
— Vandana Singh (@VandanaSsingh) July 29, 2024
அது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப்பாக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது., “படேல் நகர் மற்றும் ராஜேந்தர் நகர் ஆகிய இடங்களில் உயிரிழந்த 4 யுபிஎஸ்சி மாணவர்களுக்கு நீதி மற்றும் இழப்பீடு – நாட்டின் மிக முக்கிய பிரச்னையையாகியுள்ளது., அதனை விவாதிப்பதற்காக 267 விதியின் கீழ் மாநிலங்களவையின் அலுவலர் களை நிறுத்தி வைப்பதற்காக இந்த நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் குரல் ஒலிக்காமல் போகாது” எனத் தெரிவித்துள்ளார்.