” ஐப்பசி மாத அமாவாசை தீர்த்தவாரி-மயிலாடுதுறை”
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாத அமாவாசை தீர்த்தவாரி. உற்சவத்தில் ஏராளமானோர்’ பங்கேற்று புனித நீராடினர்:-
மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும்.
மயில் உருவில் சிவனை பூஜித்து சாபவிமோசனம் அடைந்த மாயூரநாதர் ஆலயம் மற்றும் வதான்யேஸ்வரர், உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் கொடியேற்றம் செய்யப்பட்டு 10 நாள் உற்ச்சவம் நடைபெற்று வருகிறது.
இதனை முன்னிட்டு நேற்று அமாவாசை தீர்த்தவாரி மயிலாடுதுறையில் பாடல்பெற்ற சிவாலயங்களில் இருந்து அம்பாள் புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி வழங்குவது வழக்கம்.
ஐப்பசிமாத அமாவாசையொட்டி வதானேஸ்வரர் கோயிலில் இருந்து கங்கை அம்மன் சமேத மேதாதட்சிணாமூர்த்தி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காவிரிக்கரைக்கு எழுந்தருளினார்.
பின்னர் அஸ்திரதேவருக்கு இரண்டு கரைகளிலும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.
இதில், ஆதீனங்களின் கட்டளை தம்பிரான்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.