“வேலூர் புத்தக கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கிவைத்தார்”
வேலூரில் நூலக வார விழாவை முன்னிட்டு அரசு மாவட்ட மைய நூலகத்தில் புத்தக கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார்.
வேலூரில் உள்ள தந்தை பெரியார் மைய நூலகத்தில் நூலக வார விழாவை முன்னிட்டு புத்தக கண்காட்சி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார்.
இதில் சங்ககால இலக்கியங்கள், விஞ்ஞானம், மருத்துவம், உணவுகளின் செய்முறைகள் அரசியல் மற்றும் தேச தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான புத்தகங்களும் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
இதனை மாணவர்களும் பொதுமக்களும் பார்த்து பயனடையும் வகையில் இந்த கண்காட்சி 7 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் மாவட்ட நூலக அலுவலர் பழனி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)