குழந்தைகள் மொபைல் போன் விளையாடுவதை தடுக்க சில டிப்ஸ்..!!
குழந்தைகள் என்றாலே அவர்கள் செய்யும் குறும்பு தனத்திற்கு பஞ்சமே இருக்காது, அவர்கள் செய்யும் இந்த அழகான குறும்பு தனம் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும்.., அது சில சமயங்களில் ஆபத்தில் முடிந்து விடுகிறது.
ஸ்மார்ட் போன் உபயோகித்தவர்கள் யார் என்று பார்த்தால் .. அது பிறந்து ஆறு மாதமான குழந்தையாக இருக்கும் அல்லது, அதிக வயது முதிந்தவராக தான் இருப்பார்கள்.
ஆனால் குழந்தைகள் பொழுது போக்கிற்காக பயன் படுத்தும் மொபைல் போன்கள், அதில் வரும் வீடியோக்கள், கேம்ஸ் களுக்கு அடிட் ஆகி விடுகிறார்கள்.., அதில் இருந்து அவர்களை மீட்டு எடுப்பது தான் சவாலான ஒன்றாக இருக்கிறது.
குழந்தைகள் எப்பொழுது எதையாவது சிந்திக்கும் திறனும், அதை பார்த்து அவர்கள் அப்படியே செய்யும் திறனும் அவர்களுக்கு அதிகமாகவே இருக்கும்..,
அதை நாம் சரியாக பயன் படுத்தினால் அவர்கள்.., திறமையானவர்களாக வளருவார்கள்.
குழந்தைகள் பெரிதும் விரும்புவது பொழுது போக்கை தான்.., நம்மை தொந்தரவு செய்யாமல் விட்டாலே போதும் என நினைத்து பல பெற்றோர்கள் குழந்தைகளிடம் மொபைல் போன் கொடுத்து விடுகிறார்கள்.
குழந்தைகளிடம் மொபைல் போன் கொடுப்பதற்கு பதிலாக விளையாட்டு சாமான்கள் கொடுக்கலாம்.., அல்லது கேரம், செஸ், போன்றவற்றை விளையாட கற்றுக்கொடுக்கலாம்.
அது விளையாடும் பொழுது சில குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகமாகும், சில குழந்தைகளுக்கு சலிப்பை உண்டாகும். அந்த சமயத்தில் அவர்களுக்கு வேடிக்கையாக விளையாட்டு காட்டலாம்.
பெற்றோர்கள், குழந்தைகளிடம் தோற்று அவர்களை உற்சாக படுத்தி.., அந்த விளையாட்டை விளையாட ஆர்வம் கொடுக்கலாம்.
அல்லது ஓவிய வண்ணம் தீட்டும் புத்தகங்களை (Drawing Books and Coloring books ) கொடுக்கலாம்.
இதில் ஒரு ஐந்து நாட்கள் ஆர்வம் காட்டினாலே அவர்கள் மொபைல் போன் உலகத்திற்கு செல்ல மாட்டார்கள்.
இது விடுமுறை நாட்கள் என்பதால் அவர்களை பொழுது போக்கிற்காக சுற்றுலா தளங்களுக்கு கூட்டி கொண்டு போகலாம்..,
இதுபோன்ற பல தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி