உலகின் சில முக்கிய நிகழ்வுகள்; தெரிவோம் அறிவோம்-3
சென்னை : சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தேசிய மருத்துவ ஆணையக்குழு நேற்று காலை மறு ஆய்வு நடத்தியுள்ளது.
தமிழ்நாடு : 100 ஈர நிலங்களை சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு பணிக்காக 115 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்த பணம் மறுசீரமைபிற்காக செயல் படுத்தபடுமா.., இல்லையா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தியா : குடியரசு தலைவர் திரெளபதி முர்மு முதல் பயணமாக சுரினாம் சென்று, அந்த நாட்டு குடியரசு தலைவர் சந்திரபிரசாத்தை சந்தித்துள்ளார்.
வரி விதிப்பு : 2010ல் தமிழக அரசு அறிவித்த உடன் படிக்கையில், தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருளுக்கு, குறைந்த அளவே வரி விதிக்கப்படுகிறது, சில பொருள்களுக்கு வரியே கிடையாது.
ஃபெர்ரோ மாலிப்டினம் மற்றும் எஃகு நிறைய இறக்குமதி செய்யப்படுவதால் இந்தியாவில் தயார் செய்யும் நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, எனவே இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு வரி செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
பாஜக எதிர்ப்பு : கடந்த சில நாட்களாக அமெரிக்கா மக்களிடையே பேசி கொண்டுவரும் ராகுல் காந்தி நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை செய்துக் கொண்டு வருகிறார், என பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னை : தரவரிசை பட்டியலில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக முதல் இடம் பிடித்த சென்னை ஐ.ஐ.டி.
ஆஸ்திரேலியா : ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேத்தலின் என்ற பெண் தனது 4 குழந்தைகளையும் கொலை செய்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறையில் அடைத்துள்ளனர். அவர் கொலை செய்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்காததால், அவருக்கு பொது மன்னிப்பு அளித்து நேற்று விடுதலை செய்தனர்.
செளதி அரேபியா : செளதி அரேபியாவில் 7 ஆண்டுகளுக்கு பின் ஈரான் தூதரகம் இன்று திறக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றி பார்க்க ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
சென்னை : சென்னை டு இலங்கைக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்து கப்பலை. அமைச்சர் சார்பானந்த சோனோவல் நேற்று காலை கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.
மேலும் இதுபோன்ற பல முக்கிய நிகழ்வுகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்