பாகிஸ்தானுக்கு எதிரான போரை இந்திய ராணுவ வீரங்கனை கலோனல் சோபியா குரேஷி முன்னின்று நடத்தினார். இவர், இஸ்லாமிய மத்தை சேர்ந்தவர்.
இந்த நிலையில், மத்திய பிரதேச அமைச்சர் குன்வார் விஜய் ஷா இந்தூரில் பேசுகையில், தீவிரவாதிகள் நமது இந்து சகோதரர்களின் ஆடையை கழற்றி பார்த்து , இந்துதானா? என்று உறுதிப்படுத்தி கொன்றனர். தற்போது, பிரதமர் மோடி தீவிரவாதிகளின் சகோதரியை கொண்டே, விமானத்தை அனுப்பி தீவிரவாதிகளின் வீடுகளில் குண்டு வீச செய்துள்ளார். தீவிரவாதிகள் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தனர். அவர்கள் சமுதாயத்தை சேர்ந்த ஒரு சகோதரியை அனுப்பியே தீவிரவாதிகளுக்கு பிரதமர் மோடி பாடம் கற்றுக் கொடுத்துள்ளார் என்று பேசியிருந்தார்.
விஜய்ஷா பேசிய வீடியோவை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி , இந்த அமைச்சரின்பேச்சை பாரதிய ஜனதா கட்சி ஏறறுக் கொள்கிறதா? நமது ராணுவத்தை அவமதிக்கும் வகையில் இந்த அமைச்சரின் பேச்சு உள்ளது என்று கூறியது.
இதையடுத்து, விஜய் ஷா, சோபியா குரேஷி நமது சகோதரி என்கிற ரீதியில் குறிப்பிட்டதாகவும், அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச அமைச்சரின் இத்தகைய பேச்சை , பாரதிய ஜனதா கட்சியும் கடுமையாக கண்டித்துள்ளது.