வாக்கு சாவடி மையம் மற்றும் புவனேஸ்வரி பேட்டை ஆகிய பகுதிகளில் கால்வாய் வசதி அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு
குடியாத்தம் பகுதியில் கல்லூர் வாக்கு சாவடி மையம் மற்றும் புவனேஸ்வரி பேட்டை ஆகிய பகுதிகளில் கால்வாய் வசதி அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கல்லூர் பகுதியில் உள்ள வாக்குசாவடி மையத்தினை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மையத்தில் போதிய அடிப்படை வசதிகள், கழிவறை வசதிகள் உள்ளிட்டவைகள் சரியாக உள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.
மேலும் இதே போன்று புவனேஸ்வரிபேட்டை பகுதியிலும் வாக்குசாவடி மையத்தினை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக கல்லூர் பகுதியில் மக்கள் கால்வாய் வசதியை அமைக்க கோரி ஆட்சியரிடம் மனு அளித்ததை தொடர்ந்து, அப்பகுதிக்கு நேரடியாக சென்று கால்வாய் அமைப்பது குறித்து பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.