இனி யுடியூப் ல இத மட்டும் போட கூடாதா..? கூகுள் நிறுவனத்திற்க்கு இந்தியா வைத்த ட்விஸ்ட்..!!
நாடாளுமன்றத் தேர்தலில் நடுநிலையாக செயல்படுமாறு மெட்டா மற்றும் கூகுள் நிறுவனத்திற்க்கு இந்தியா கூட்டணி கடிதம் எழுதியுள்ளது.
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், யுட்யூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் ஆதரவாக செயல்படுவதாக வாஷிங்டன் செய்தித்தாள் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் இணைந்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அனுப்பியுள்ள இந்த கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதில், மெட்டா நிறுவனம் சமூக ஒற்றுமைக்கு பங்கம் விளைவிப்பதாகவும் மதவெறியைத் தூண்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுபோல, கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சைக்கு எழுதியுள்ள கடிதத்திலும், இந்தியாவில் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பதாகவும் வகுப்புவாத வெறுப்பைத் தூண்டுவதாகவும் குறிப்பாக ஆல்பபெட் குறிப்பாக யூடியூப் மீது குற்றம் சாட்டப்படுவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்கள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றும், சமூக பதற்றத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது…