இந்துக்கள் மட்டும் தான் கோவிலுக்குள் செல்ல வேண்டுமா..? நமீதா கேள்வி..!!
மதுரை மாவட்டம் திருப்பாலை அடுத்த இஸ்கான் கோவிலில் நேற்று நடைபெற்ற ஜென்மாஷ்டமியில் பங்கேற்பதற்காக நடிகை நமீதா தனது கணவருடன் மதுரைக்கு சென்றுள்ளார். முன்னதாக நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கோவில் அலுவலர் ஒருவர் நமீதாவிடம் “நீங்கள் இந்து என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது.? அதற்கான ஆதாரத்தை காட்டும் படி கேட்டுள்ளார்..” தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதன் பின் மதுரையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நமீதா, நானும் என் கணவரும் “மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றபோது, நாங்கள் இந்து தான் என்பதற்கான ஆவணத்தை கொடுத்தால் மட்டுமே கோவிலின் உள்ளே அனுமதிக்க முடியும் என சொன்னார்கள்., இந்துவாக இருந்தால் மட்டும் தான் கோவிலுக்குள் செல்ல வேண்டுமா..?
தமிழ்நாட்டில் இதுவரை எத்தனையோ கோவில்களுக்கு சென்றுள்ளோம் யாரும் எங்களிடம் இப்படி கேட்டதில்லை., திருப்பதியில் கூட நம்மிடம் முகவரி சான்றுக்கான ஆதாரங்களை மட்டும் தான் கேட்பார்கள்.,
திருப்பாலையில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு வந்திருக்கிறோம் என தெரிந்து இதுபோன்று நடந்துக்கொள்வது மிகவும் வேதனை அளிக்கிறது., பாஜக கட்சி என்ற அடையாளத்தோடு வந்திருந்தாள்., நேரடியாக சாமியின் கருவறைக்குள்ளேயே சென்றிருக்கலாம்., ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லை இது எங்களுடைய தனிப்பட்ட பயணம். அதனை விஐபி என்ற அடிப்படையில் எங்களை அனுமதிக்கவில்லை என்றாலும் கூட, பொதுமக்களில் ஒருவராக அனுமதித்திருக்கலாம்..
ஒரு நடிகையாக வந்தால் மக்களுக்கு இடையூறு இருக்கும் என்றதால் தான் நான் மாஸ்க் அணிந்து கொண்டு சாதரண ஒரு பக்தராக கோவிலுக்கு சென்றேன்… ஆனால், நாங்கள் தான் வந்திருக்கிறோம் என்பதை காவல் உயர் அதிகாரிகளிடம் சொல்லி விட்டு தான் கோயிலுக்குள் செல்ல முயன்றோம். அரசியல் காரணங்களாக நான் அதை நான் பார்க்கவில்லை அதை குற்றச்சாட்டாக முன்வைக்கவில்லை.
இதன் தொடர்ச்சியாக வேறு யாருக்கும் நடைபெறக்கூடாது என்பதுதான் எங்களது வேண்டுகோள்.., ஏனென்றால், வெளிநாட்டில் இருந்து வருகின்ற நபர்களுக்கு அது போல நடந்தால் நம்மைப் பற்றி அவர்கள் தவறாக நினைப்பார்கள். எங்களை குறுக்கு விசாரணை செய்த இடத்தில் சரியான நபர்களை பதவியில் அமர்த்துங்கள் என்பது மட்டுமே எங்களது வேண்டுகோள்.