பெண் போலீஸ்க்கு துப்பாக்கி சுடுதல் போட்டி…!
தமிழக காவல்துறையில் மகளிர் காவலர் இணைந்த பொன்விழாவினை முன்னிட்டு மகளிர் காவலர்களுக்கான அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழக கமாண்டோ பள்ளி பயிற்சி மையத்தில் நடைபெற்று வருகிறது.
இரண்டாவது ஆவது நாளாக நடக்கும் இதில் ரைபிள், பிஸ்டல் ரிவால்வர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன.
காவல் துறை அமைப்புகள், மத்திய ஆயுதப்படைகளின் 30 அணிகளைச் சேர்ந்த எட்டு உயர் அதிகாரிகள் உட்பட, 454 மகளிர் காவலர்கள் பங்கேற்று வருகின்றனர்.
-பவானி கார்த்திக்