சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்அதிர்ச்சி..!! போலீசில் சிக்கிய 2 நபர்கள்..! நடந்தது என்ன..?
பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஹவாலா பணம் கடத்தப்பட்டு வருவதாக.., சென்னை சென்ட்ரல் காவல் கட்டுபாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.. அதன் பெயரில் காவல் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த சோதனையில் பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த டபுள் டெக்கர் ரயிலில் பயணம் செய்த பயணிகளிடம் சோதனை மேற்கொண்ட பொழுது 2 ஆசாமிகள் சிக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து 25 லட்சம் ரொக்க பணம் சிக்கியுள்ளது. இதனை தொடர்ந்து அவர்களிடம் சோதனை மேற்கொண்ட பொழுது அந்த நபர் பெங்களூருவை கிருஷ்ணமூர்த்தி என்பது தெரியவந்தது.
பணம் குறித்து விசாரணை நடத்திய போது சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைகடையில் பணம் கொடுக்க வந்ததாக அவர் கூறினார்.., ஆனால் அது பொய் என யூகித்த போலீசார் நடத்திய விசாரணையில் 25 லட்சம் ஹவாலா பணத்தை கைப்பற்றியுள்ளனர்.
இந்த நபர் மட்டுமின்றி ஹைதராபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த ரயிலில் பயணம் செய்த ஆந்தராவைச் சேர்ந்த வாசு என்பவர் சிக்கியுள்ளார்.., இந்த வாசு என்பவரிடம் இருந்து 11.98 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர். வாசுவிடம் விசாரணை நடத்திய போது பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் 2 வரையும் சிறையில் அடைந்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..